ஆண் சிசுவொன்றை உறையில் போட்டு குழி தோண்டிப் புதைத்த சம்பவம் ஒன்று நிவித்திகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நிவித்திகல உடதெல்வல எந்தான பகுதியில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பில் 40 வயதான தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நடைபெற்று பல நாட்களாயினும் இவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரால் நிவித்திகல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, நேற்று குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட சிசுவின் தாய் தான் மலசல கூடத்துக்கு சென்ற போது பிரசவம் ஏற்பட்டு சிசு கீழே விழுந்து கதறியதாகவும் அதன்பின்னர் தான் சிசுவை உறையொன்றினுள் போட்டு வீட்டின் பின் குழிதோண்டிப் புதைத்ததாகவும் வாக்குமூலமளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரான பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM