கொஸ்கம - கனம்பெல்ல சந்தியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று பதிவானது. கொழும்பு - அவிசாவளை ஹை லெவல் வீதியில் உள்ள கட்டட பொருட்களை விற்பனை செய்யும் ஹார்ட்வெயார் ஒன்றும் கேஸ் சிலிண்டர் விற்பனை நிலையம் ஒன்றுமே இவ்வாறு தீ அனர்த்தத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் பரவிய மேற்படி தீயினால் பிரதேசத்தில் பதற்றநிலை ஒன்று தோன்றியதுடன், கனம்பெல்ல சந்தி ஊடான போக்குவரத்தும் பொலிஸாரால் தடைசெய்யப்பட்டு மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டன.
இந் நிலையில் தீ பரவலை அடுத்து அவிசாவளை நகர சபையின் தீயணைப்பு வண்டிகளின் உதவியுடன் தீயணைப்புப் படையினரும், சாலாவ இராணுவ முகாமின் வீரர் களும் பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியாக போரிட்டனர். சுமார் நான்கு மணி நேரத்துக்கும் அதி கம் இவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாரிய முயற்சிகளை முன்னெடுத்தனர், எனினும் இச்செய்தி அச்சுக்கு போகும் போதும் தீ முழுமையாக அணைக்கப்பட்டிருக்கவில்லை.
திடீர் தீ பரவலுக்கான காரணம் உடன டியாக தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM