5 மாணவர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் : மற்­று­மொரு கடற்­படை வீரர் சி.ஐ.டி.யால் கைது

Published By: Priyatharshan

21 Jun, 2017 | 09:39 AM
image

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புறநகர் பகு­தி­களிலிருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்ட   சம்­பவம் தொடர்பில் மற்­றொரு கடற்­படை வீரரை குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். 

ஏற்­க­னவே இந்த விவ­கா­ரத்தில் 5 கடற்­ படை அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே தற்­போது மற்­றொரு கடற்­படை வீரர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

 தங்­கா­லையில் உள்ள ருஹுனு கடற்­படை முகாமில் சேவை­யாற்றி வந்த கடற்­படை வீரர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக குற்றப் புல­னா­யவுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 நேற்று முன் தினம் காலை 10.00 மணிக்கு குற்றப் புல­னா­யவுப் பிரிவின் சமூக கொள்­ளைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவில் ஆஜ­ரான  குறித்த கடற்­படை வீர­ரிடம் இரவு 8 மணிக்கும் மேலாக சுமார்  10 மணி நேரத்­துக்கும் அதிக நேரம்  விசா­ரணை நடத்­தப்­பட்டே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக  அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வி­னரால் இந்த விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பிணையில்  லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்க உள்­ள­துடன் விளக்­க­ம­றி­யலில் ஏனைய சந்­தேக நபர்­க­ளான கடற்­படை சிறப்பு புல­னா­யவுப் பிரிவின் கமான்டர் சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக்ஷ்மன் உத­ய­கு­மார,  நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ ஆகியோர் இருந்து ுந்து வருகின்றனர். 

இந் நிலையிலேயே புதிதாக மற்றொரு சந்தேக நபராக கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51