பொகவந்தலாவை - பெட்றசோ டெவன் போல் பிரிவில் வீடு ஒன்றில் இருந்து தீயில் எரிந்து கருகிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேந்று மாலை மீட்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் சுப்பிரமணியம் மருதை (70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது தந்தை தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்தே இச்சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
இக்குடும்பஸ்த்தருக்கு பிள்ளைகள் இருந்த போது கவனிப்பார் அற்ற நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் அயலவர்கள் வழங்கிய உணவினை உண்டு வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மரணம் நிகழ்ந்துள்ளமை தொடர்பாக சந்தேகம் நிகழ்வதால் குறித்த மகன் தீ மூட்டி தந்தையை கொலை செய்தாரா அல்லது தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டரா தொடர்பாக பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் இன்று அட்டன் நீதவானின் கண்காணிப்பின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் அட்டன் கைரேகை விசாரணை பிரிவு ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகலும் பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM