(ஆர்.யசி)
நாட்டில் மோசமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 63 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சகல அரச வைத்தியசாலைகளிலும் 100க்கும் அதிகாமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நாட்டில் சகல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இந்த ஆண்டில் இதுவரையிலான ஆறுமாத காலத்தில் 63 ஆயிரத்து 987 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக சகல மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவிவரும் நிலையில் நாட்டில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வைத்திய சாலையில் 100 க்கும் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிளை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் வீட்டு மற்றும் வெளி சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் தொடர்ச்சியாக சுகாதார துறையினர் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் ஒரு நபருக்கு மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல், இருமல் இருக்குமாயின் உடனடியாக வைத்திய உதவிகளை நாடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM