கொள்ளுப்பிட்டிய கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம் வென்னப்புவ சால்ஸ் விலியம் மாவத்தையில் வசித்த 25 வயதான யுவதி என இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த யுவதி கடந்த 15 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் அவரது சடலம் கொள்ளுப்பிட்டி கடலில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை பிரத்தியேக வகுப்புக்காக கொழும்புக்குச் செல்வதாகத் தெரிவித்து வீட்டிலிருந்து சென்ற தமது மகள் மாலையாகியும் வீடு திரும்பாதமையால் அவரது பெற்றோர் உடனடியாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டின் பின்னர் இத்தகவல் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தேடலில் கொள்ளுபிட்டி கடற்கரையில் குறித்த யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமது மகளுக்கு தற்கொலை செய்து கொள்ளுமளவு காரணங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றும் இந்த மரணத்துக்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியாதுள்ளதாக பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM