வடக்கை தமிழர்கள் உரிமை கோர முடியாது; வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல : சம்பிக்க

Published By: Priyatharshan

20 Jun, 2017 | 09:34 AM
image

வடக்கு மாகா­ண­மா­னது  தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் அல்ல.  சிங்­கள, முஸ்லிம் மக்­களும்  வடக்கில் தைரி­ய­மாக வாழ முடியும்.  ஆகவே, வடக்கை தமி­ழர்கள் உரிமை கோர முடி­யாது என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 

சிங்­கள பெளத்த இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்த முன்னர் வடக்கில் தமி­ழர்­களின் இன­வாத செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஜாதிக ஹெல உறு­மய அமைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

 அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,  

இலங்­கையின் வடக்கு மாகாணம் தனித்த மாகாணம் அல்ல. இலங்­கையின் ஏனைய பகு­தி­களை போலவே வடக்கும் அனைத்து தரப்­பி­னரும் வாழ்ந்த ஒரு  பூமி­யாகும். அவ்­வாறு இருக்­கையில் வட­மா­காணம் மாத்­திரம் தமி­ழர்­க­ளுக்கு சொந்­த­மான பூமி­யென கூற முடி­யாது. 

வடக்கில் யுத்­தத்தின்  போது  ஏற்­பட்ட நிலை­மை­களே அங்­கி­ருந்து சிங்­கள, முஸ்லிம் மக்­களை வெளி­யேற்ற கார­ண­மாக அமைந்­தன. வடக்கு தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் அல்ல. தமி­ழர்­க­ளுக்கு என வடக்கை உரிமை கேரா முடி­யாது. 

அங்கு சகல மக்­களும் வாழ்ந்­துள்­ளனர். யுத்­தத்தின் பின்னர் காணி விடு­விப்பு விட­யத்தில் தமிழர் வாழ்ந்த இடங்­களில் அவர்­களை வாழ அனு­ம­திக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்­க­ளுக்கும் சம உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும். அங்கு சிங்­கள மக்­களும் முஸ்லிம் மக்­களும் தைரி­ய­மாக செயற்­பட  உரிமை உள்­ளது. 

மேலும் சிங்­கள பெளத்த கருத்­துக்­களை இன­வாதக் கருத்­துக்­க­ளாக தெரி­வித்து ஊட­கங்­களும் தமிழ், முஸ்லிம் அர­சியல் வாதி­களும் கூறு­கின்­றனர். ஆனால் தமி­ழர்­களின், முஸ்­லிம்­களின் இன­வாத கருத்­துகள் வெளி­வ­ரு­வ­தில்லை. ஊட­கங்­களும் இன­வாத கருத்­துக்­களை தவிர்த்து  செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன. 

எமது கருத்­து­களை இன­வாத கருத்­தாக தெரி­விக்கும் நபர்கள் தமிழ் இன­வாத கருத்­துக்­க­ளையும் வெளிப்­ப­டுத்த வேண்டும். உண்­மை­களை சரி­யாக தெரி­விக்க வேண்டும். வடக்கில் பரப்­பப்­பட்டு வரும் இன­வாத கருத்­துக்­களை மறைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. சிங்­கள மக்­க­ளுக்கு உண்­மை­களை வெளிப்­ப­டுத்த வேண்டும். 

அமைச்­சர்­க­ளாக இருந்­தாலும் சரி அல்­லது அரச அதி­கா­ரி­க­ளாக இருந்­தாலும் சரி எவர் இன­வாதக் கருத்­துக்­களை பரப்­பி­னாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். இனவாதிகளுக்கு சலுகைகள் இல்லை. நாட்டின் நல்லிணக்கம் என்பது சகல தரப்பினர்  மூலமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.   மாற்றாக ஒரு சாராரை மாத்திரம் குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58