ஜெப­மாலை, அனுமார் சிலை, புத்தர் சிலையை தன்­னுடன் எப்­போதும் எடுத்துச் செல்லும் ஒபாமா

Published By: Raam

18 Jan, 2016 | 08:22 AM
image

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா வெள்ளை மாளி­கையில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருக்கு அளித்த பேட்­டியின் போது, தனது சட்டைப் பையில் எடுத்துச் செல்லும் மத ரீதி­யான அன்­ப­ளிப்­பு­களை காண்­பித்­துள்ளார்.

யூரியூப் ஊட­க­வி­ய­லா­ள­ரான இங்­கிறித் நில்­ஸ­னுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்­டியின் போதே அவர் இவ்­வாறு தன் சட்டைப் பையி­லுள்ள மத ரீதி­யான அன்­ப­ளிப்­பு­களைக் காண்­பித்­துள்ளார்.

அவரால் காண்­பிக்­கப்­பட்ட அன்­ப­ளிப்­பு­களில் பாப்­ப­ர­சரால் அவ­ருக்கு வழங்­கப்­பட்ட ஜெப­மாலை, இந்து மத­குரு ஒரு­வரால் வழங்­கப்­பட்­டி­ருந்த சிறிய அனுமார் சிலை மற்றும் பௌத்த துற­வி­யொ­ரு­வரால் வழங்­கப்­பட்­டி­ருந்த சிறிய புத்தர் சிலை என்­பன உள்­ள­டங்­கு­கின்­றன.

இது தொடர்பில் பராக் ஒபாமா கூறு­கையில், “நான் அவற்றை எப்­போதும் என்­னுடன் எடுத்துச் செல்­கி­றேன். அவற்றை என்­னுடன் எடுத்துச் செல்­வது நான் எனது பய­ணத்தில் சந்­தித்த வேறு­பட்ட மனி­தர்­களை தனக்கு ஞாப­கப்­ப­டுத்­து­வ­தாக உள்­ள­து'' என அவர் கூறினார்.

அத்­துடன் அவை அமைதி, புரிந்­து­ணர்வு, நீதியான நடத்தை என்பன தொடர்பில் தன்னை சிந்திக்க வைக்க உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right