முன்னணி அணிகளுக்கு அதிக அளவில் போட்டிகள் இருப்பதால் அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த இருபதுக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடுவதாலும், அதிக அளவில் சுவாரஸ்யம் இருப்பதாலும் ஐ.சி.சி. இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்தது.
அதன்படி தென்னாபிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்தியத் தீவுகள் (2010), இலங்கை (2012), பங்களாதேஷ் (2014), இந்தியா (2016) ஆகிய நாடுகளில் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் நடத்தப்பட்டது.
அதன்படி அடுத்த வருடம் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும். ஆனால்இ முன்னணி அணிகள் தங்களுடைய இரு நாடுகளுக்கிடையேயான தொடரில் அதிக அளவில் விளையாட வேண்டியிருப்பதால் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணையை தயார் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதில்லை என்று ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கு பதிலாக 2020ஆம் ஆண்டில் தொடரை நடத்த ஐ.சி.சி. முன்வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM