சாம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிபோட்டியில் பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் இந்தியாவுக்கு 339 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் சாம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிபோட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஏற்கனவே லீக் சுற்றில் பாகிஸ்தானை அணியினை இந்திய அணி வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி.யின், 'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் 8 ஆவது சாம்பியன்ஸ் கிண்ண இறுதி போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா அணித்தலைவர் முதலில் பாகிஸ்தானை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.
அதன்படி முதலில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணிசார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய பகர் ஜமான் 114 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அஸ்ஹர் அலி மற்றும் முகமட் ஹபீஸ் அரைசதம் கடந்தனர்.பந்து வீச்சில் இந்திய அணிச்சார்பாக ஜாதவ்,பாண்டிய மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை தமக்கிடையே பகிர்ந்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM