இந்தியாவிலிருந்து நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த இருவர் கைது

Published By: Raam

18 Jun, 2017 | 03:56 PM
image

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நட்சத்திர ஆமைகளை இலங்கைக்கு கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படயினருக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கடற்படை வீரர்களால் நேற்று (17) கல்பிட்டி, இப்பந்தீவு மற்றும் சின்ன அரிச்சால் இடையில் கடல் பகுதியில் வைத்து இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக கொன்டுவரப்பட்ட 2089 ஆமைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகபர்கள், ஆமைகள் மற்றும் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சிந்நபாடு சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்