முல்லேரியாவில் அமைந்துள்ள தொற்றுநோய்களுக்கான தேசிய வைத்தியசாலைக்கு இன்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி அவற்றை துரிதமாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
டெங்கு நோயாளர்களினால் வைத்தியசாலை நிரம்பியுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியினால் நோயாளர்களை தங்கவைத்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், நோயாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் அவர்களை தலங்கம, வேத்தர மற்றும் பிலியந்தலை வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைத்த பின்னர் வைத்தியசாலையின் செயற்பாடுகள் மீண்டும் உரியவாறு மேற்கொள்ளப்படுகின்றன.
இச்செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்த ஜனாதிபதி வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்களுக்கு தேவையான அனைத்து விசேட மருத்துவ சிகிச்சைகளையும் குறைவின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் டெங்கு நோயாளர்களின் வார்ட்டுத்தொகுதியை அவதானித்த ஜனாதிபதி அவர்கள் நோயாளர்களின் விபரங்களை விசாரித்து, அவர்களுடன் சினேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.அதன் பின்னர் வைத்தியசாலையின் பணியாட்களுடனான சந்திப்பில் ஈடுபட்டதுடன் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட வைத்தியசாலையின் ஏனைய குறைபாடுகள் தொடர்பாக வினவினார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வைத்தியசாலையின் பணிப்பாளர் திமுது ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM