இனமுறுகலை ஏற்படுத்தும் ஆவணங்கள் பொதுபலசேனாவின் அலுவலகத்தில் மீட்பு

Published By: Priyatharshan

17 Jun, 2017 | 12:28 PM
image

குரு­நாகல் பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­பவத்­துடன் தொடர்­பு­டைய  சந்­தேக நப­ருக்கு சொந்­த­மான அறை­யொன்­றி­லி­ருந்து இன முறு­கலை ஏற்ப­டுத்­து­ம் வகையிலான 486 பதா­கை­களும் பத்­தி­ரி­கை­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

குரு­நாகல் மல்­ல­வ­பி­ட்டிய முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பொது­பல சேனா அமைப்பின் செயற்­பாட்­டா­ளர்கள் என தெரி­விக்­கப்­படும் இரு­வரில் ஒரு­வ­ருக்கு சொந்­த­மா­ன­தாக்க கூறப்­படும் கடை ‍அறை­யொன்று சோ­த­னைக்குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன் போது பத்­தி­ரி­கைகள்இ சுவ­ரொட்­டிகள்இ ஆவ­ணங்கள்இ இறு­வட்­டுக்கள் உள்­ளிட்ட 486 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் இனங்கள் மற்றும் மதங்­க­ளுக்கு இடையில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் வகையில் வாசகங்கள் எழு­தப்­பட்­டி­ருந்த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மையில் குரு­ணாகல் மல்­ல­வ­ பி­டிய பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தி­ய­தாக கூறப்­படும் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் இருவர் கடந்த 15 ஆம் திகதி வியா­ழக்­கி­ழ­மை­ குரு­ணாகல் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டு­த்தப்­பட்­டி­ருந்த நிலையில் 19 ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

மேற்­படி இரு சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வெல்­லவ வீதியில் அமைந்துள்ள வியா­பார நிலையத்தில் நேற்று முன்­தினம் பொலிஸார் நடத்­திய திடீர் சோத­னையின் போது இன முறு­கலை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19