பஸ் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரின் கைப்பையில் இருந்த தங்க ஆபரணங்களை திருடி தப்பிச் செல்ல முற்பட்ட நபரொருவரையும் பெண்கள் இருவரையும் ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறையில் இருந்து ஹொரணை நோக்கிச் செல்லும் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் இருந்த தங்க ஆபரணங்களே திருடப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் சுமார் 250,000 பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிக் கொண்டு தப்பிச் செல்லும் போது, மொரகஹஹேன பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தங்க ஆபரணங்களுடன் ஹொரண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றைய தினம் ஹொரணை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM