இலங்கை மின்சார சபையால் தயாரிக்கப்பட்டதும் எதிர்வரும் 20 ஆண்டு காலத்திற்கான (2018-2037) இலங்கையின் மின்சக்திப் பிறப்பாக்கத்திற்கு உரியதுமான திட்டம், அனுமதி கோரி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறைக்கான ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இத் திட்டம் தொடர்பில் பொதுமக்களிடம் ஆலோசனை பெறும் நிகழ்வினை இன்று காலை நடத்தியது.
பொதுமக்களிடம் ஆலோசனை பெறும் இந்த நிகழ்வு சர்வதேசக் கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்றது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான தம்மித்த குமாரசிங்க அறிமுக உரையாற்றி, அனைவரையும் வரவேற்றார்.
அவ் அறிமுக உரையின் பின்னர் ஆணைக்குழுவின் செயலாளரால் ஆலோசனையளிப்பு நிகழ்வில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரான சாலிய மத்யூ உத்தியோக பூர்வமாக இந்நிகழ்வினை, ஆரம்பித்து வைத்தார்.
பெற்றோலிய மூலவளங்கள் அபிவிருத்திச் செயலகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ப்ரீத்தி விதானகே, மழைக்காடு காப்பாளர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த ஜயந்த விஜெசிங்க, இலங்கை உயிர்ச் சக்தி சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பராக்கிரம ஜயசிங்கே ஆகியோர் இந்த மின் பிறப்பாக்கத்திட்டம் தொடர்பிலான தம் கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஆக்க பூர்வமான அணுகுமுறையில் முன்வைத்தனர்.
மேலும், மூலோபாய வணிக முகாமைத்துவ முகவரகம், சுற்றுச்சூழல் மன்றம், இலங்கை சூரிய சக்தித் தொழிற்றுறைகள் சங்கம், சிறு நீர்ச்சக்தி அபிவிருத்தியாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளும் தத்தம் பிரதிநிதிகளை அனுப்பி, அடுத்த இருபது ஆண்டுகளுக்கான மின் பிறப்பாக்கத் திட்டம் மீதான தம் கருத்துகளை வெளிப்படுத்தின.
இவ் அமைப்புகள் மட்டுமல்லாது, மின்சாரத் தொழிற்றுறை விற்பன்னர்கள், சூழலியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோரும் தம் கருத்துகளை ஆணைக்குழுவின் முன் வெளிப்படுத்தினர்.
இலங்கை மின்சார சபையால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இலங்கைக்கான மின்சக்தித் தேவைப்பாட்டினைப் பூர்த்தி செய்யும் விதமாக தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகளும் ஆலோசனைகளும் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM