கழிவுகளை வகைப்படுத்தல் தொடர்பில் விரிவான திட்டம் : ஜனாதிபதி

Published By: Robert

15 Jun, 2017 | 08:46 AM
image

கழிவுகளை வகைப்படுத்தல் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்காக விரிவான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்படி ஆலோசனையை வழங்கினார். கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி அலுவலர்களிடம் வினவினார்.

உள்ளுராட்சி நிறுவனங்களால் தெரிவு செய்யப்படும் இடங்களில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி சுற்றாடல் பொலிஸாரை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

புத்தளம் அருவக்காறு கழிவகற்றல் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இந்த ஆண்டு 2000 மில்லியன் ரூபா நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

வீதிகளின் இருபுறமும் கழிவுகளை வீசுதல் தொடர்பான நாளாந்த அறிக்கையை வழங்குமாறும் ஜனாதிபதி சுற்றாடல் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37