சிறைக் கைதிகள் நலன்புரி சங்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார். இதன்போது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பெளத்த மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்காமையின் காரணமாக மண்டபத்தில் அமர்ந்திருந்த பிக்கு ஒருவர் ஆக்ரோஷத்துடன் எழுந்து ஜனாதிபதி முன்னிலையில் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் உரையாற்றுவதற்காக மேடைக்கு வந்திருந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கீழே சென்று பூரண மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார். அதன்பின்னர் ஆற்றிய தனது உரையின் போது நிகழ்ந்த தவறுக்கு அமைச்சர் சுவாமிநாதன் மன்னிப்பு கோரியதுடன் தான் எந்த சந்தர்ப்பத்திலும் இனப்பாகுபாடு பார்ப்பவன் அல்ல. அனைத்து மதங்களையும் மதிக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
சிறைச்சாலை கைதிகள் நலன்புரி சங்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு சிறைச்சாலை கைதிகள் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ,சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள், சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் வழமையான சம்பிரதாயபூர்வமான மத அனுஷ்டானங்கள் செய்யப்பட்டன. அதன்பின்னர் சிறைச்சாலை கைதிகளின் நலன்புரி சங்கத்தின் அதிகாரியொருவர் வரவேற்புரை ஆற்றினார். அதன்பின்னர் உரையாற்றுவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அழைக்கப்பட்டார்.
இதன்படி அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மேடைக்கு வந்து உரையாற்ற முற்படும் போது திடீரென ஆக்ரோஷமாக எழுந்த ரங்கூல பக்தே ஞானதஸ்ஸே தேரர், சிறைச்சாலை கைதிகள் நலன்புரி சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பெளத்த மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறு நடத்தப்படவில்லை. பெளத்த மத அனுஷ்டானம் நடக்காமல் நிகழ்வுகள் நடக்கின்றன.ஜனாதிபதியே நீங்கள் இதனை பார்க்கவில்லையா? என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சீறிப்பாய்ந்தார். இதன்போது மண்டபத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட தொடங்கியது.
இதன்போது மேடையில் இருந்த அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மத அனுஷ்டானங்களுக்கு இடமளித்து கீழே இறங்கி வந்தார். அதன்பின்னர் அனைத்து மதங்களின் பூரண அனுஷ்டான நிகழ்வு நடந்தேறியது. அதன் பின்னர் உரை நிகழ்த்த வந்த அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், இந்நிகழ்வில் நடந்த தவறுக்கு நான் வருந்துகின்றேன்.
இது என்னுடைய ஏற்பாட்டில் நடந்தவையல்ல. நான் இனப்பாகுபாடு பார்ப்பவன் அல்ல. அனைத்து மதங்களையும் நான் மதிக்கின்றேன். தற்போது கூட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டுதான் இங்கு வந்துள்ளேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM