தபால் சேவை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்டுள்ள பணி பகிஷ்கரிப்பினால் தபால் சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. நாடு பூராகவும் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தபாலகங்களிலும் அஞ்சல் பெட்டிகளிலும் தேக்கமடைந்துள்ளன.
நுவரெலியா, கண்டி, காலி கோட்டை தபால் நிலைய கட்டிடங்கைளயும் அதன் காணியினையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தபால் சேவை ஊழியர்கள் நீண்ட காலம் எதிர்கொள்ளும் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு முன்வைக்க கோரியும் ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் தபால் சேவை ஊழியர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் இரு நாள் பணி பகிஷ்கரிப்பில் இறங்கியுள்ளனர்.
நாடு பூராகவுமுள்ள அறுநூற்று ஐம்பத்து மூன்று தபால் நிலையங்களும் மூவாயிரத்து நானூற்று பத்து உப தபால் நிலையங்களும் நேற்று மூடப்பட்டிருந்தன.
பணி பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அஞ்சல் கொண்டு செல்லப்படவில்லை. அத்துடன் வெளி மாவட்டங்களிலிருந்தும் கொழும்புக்கு தபால்கள் கொண்டு வரப்படவில்லை. நடமாடும் தபால் சேவைகளும் இடம்பெறவில்லை.
கொழும்பிலுள்ள பிரதான தபால் பரிமாற்று நிலையத்தில் மாத்திரம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தேக்கமடைந்துள்ளன. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள அஞ்சல்கள் விமான நிலையத்தில் தேக்கமடைந்துள்ளன.
இதேவேளை தபால்,தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் கொழும்பிலுள்ள பிரதான அஞ்சல் பரிமாற்று நிலையத்திற்குச் சென்று தொழிற்சங்க பிரதானிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பணி பகிஷ்கரிப்பு கைவிடப்படவில்லை.
இதேவேளை சகல தரத்திலுமுள்ள தபால் சேவை ஊழியர்களின் விடுமுறை கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் 14 ஆம் திகதி நள்ளிரவு வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் மா அதிபர் நேற்று முன்தினம் சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்ப முடிவுத் திகதி நாளை வியாழக்கிழமை என்பதால், தபால் சேவை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு விண்ணப்பதாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கியதையும் அவதானிக்க முடிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM