வட மாகண முதல்வர், ஆளுனருடனிருந்து நிலமைகளை ஆராய்ந்த ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)

Published By: Robert

13 Jun, 2017 | 12:32 PM
image

வட மாகாணத்தில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் பற்றி கண்டறியும் கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வட மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் 2017 ஆம் ஆண்டில் வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி செலவிடப்படும் விதம் தொடர்பாக இதன்போது அதிகாரிகளிடம் விசாரித்த ஜனாதிபதி, உரிய அபிவிருத்தி திட்டங்களின் மூலமாக அந்த நிதியை மக்களின் நன்மை கருதி உரிய முறையில் செலவிடுதல் அரசியல் பிரதிநிதிகளினதும் அதிகாரிகளினதும் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.

யாழ் மாவட்டத்தின் பெருந்தெருக்கள், சுகாதாரம், கல்வி மற்றும் குடிநீர் உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வசதிகளின் குறைபாடுகள் தொடர்பாக இதன்போது கண்டறிந்த ஜனாதிபதி அக்குறைபாடுகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் மீள் குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

வீடுகளை நிர்மாணிப்பதற்காக மணலைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இதன்போது அரசியல் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன், சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு உரிய இடங்களில் மணல் மற்றும் கற்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு தான் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்காக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர், சூழல் அதிகார சபை, வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன சீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமித்து எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் அந்த விடயத்தை முடிவுக்கு கொண்டுவர தான் ஆலோசனை வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம்.சுவாமிநாதன், துமிந்த திசாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38