பாகிஸ்தான் அணிக்கிடையிலான முக்கியமான வாழ்வா, சாவா போட்டியில் இலங்கை அணி பிடியெடுப்புக்கள் மற்றும் களத்தடுப்பில் சொதப்பியதால், சம்பியன்ஸ் கிண்ணக்கனவு கலைந்ததுடன் இலங்கை அணி ரசிகர்களை ஏமற்றிய நிலையில் நாடு திரும்பவுள்ளது.
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பு, குறிப்பாக முக்கியமான கட்டத்தில் இரண்டு பிடியெடுப்புகளை தவறவிட்டதன் மூலமும், பந்துவீச்சு மற்றும் அணுகுமுறையின் காரணமாக இலங்கை தோல்வியுற்று தொடரிலிருந்து பரிதாபகரமாக வெளியேற்றப்பட்டது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சிறப்பான துடுப்பாட்டத்தினால் இலங்கை அணி வெற்றிபெற் றது என்று சொல்வதைவிட, இலங்கை வீரர்களின் தவறால்தான் பாகிஸ்தான் வெற்றியை ருசித்தது எனலாம்.
236 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்திருக்கும். லசித் மலிங்கவின் முதலாவது ஓவரில் கைக்கே வந்து விழுந்த பந்தை தவறவிட்டார் குணதிலக்க. இதன் பிறகு ஒரு ஓவர் நிதானித்து அதிரடியாக ஆடத்தொடங்கினர் பாக். வீரர் கள். 11 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 74 ஓட்டங்க ளைக் குவித்தது பாகிஸ்தான்.
அரைச் சதம் எட்டிய அகமது 12 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட வந்த பாபர் அசாம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 10 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பஇ தொடர்ந்து வந்த முகமது ஹபீஸ் அடுத்த ஓவரில் ஒரு ஓட்டத்துடன் வீழ்ந்தார். நன்றாக ஆடி வந்த அசார் அலியும் 20 ஆவது ஓவரில் ஆட்டமிழக்க 111 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் சற்று தடுமாற்றம் கண்டது.
தேவைப்பட்ட ஓட்டங்கள் குறைவாகவே இருந்ததால் பாகிஸ்தான் விக்கெட் இழப்புக்களை பற்றி பெரிதாகக் கவலையுற்றதாகத் தெரியவில்லை. அவர்கள் உடல் மொழியில் தன்னம்பிக்கையே தெரிந்தது.
ஆனால் 25ஆவது ஓவரில் ஷோயிப் மலிக்இ 26ஆவது ஓவரில் இமாத் வாஸிம்இ 30ஆவது ஓவரில் அஷ்ரப் என துரித கதியில் வீரர்கள் வெளியேற பாகிஸ்தானின் ஆட்டம்இ சற்று ஆட்டம் கண்டது. 30 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு தேவை 20 ஓவர்களில் 75 ஓட்டங்கள். தொடர்ந்து களத்தில் இணைந்த சர்பராஸ் அஹமது மற்றும் ஆமிர் இருவர் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தனர். அடுத்த 10 ஓவர்கள் இவர்கள் பொறுப்பாக ஆடஇ மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் பாக். இலக்கை நெருங்கியது.
இதற்கு நடுவில்இ 39ஆவது ஓவரில், மலிங்க வீசிய பந்தை சர்பராஸ் நேராக தூக்க, கைக்கு வந்த பிடியை தவறவிட்டார் திசர. அடுத்த ஓவரில் மீண்டும் சர்பராஸின் பிடியை தவறவிட்டார் சீகுகே பிரசன்ன. அதன்பிறகு அற்புதமாக ஆடி வந்த சர்பராஸ் 71 பந்துகளில் அரைச் சதம் கடந்தார். அவரது அரைச் சதத்தை விட, அணிக்கு மிக முக்கியமான 50 ஓட்டங்களை, முக்கியமான கட்டத்தில் குவித்தார் என்பதே அந்த சூழலில் சிறப்பம்சமாக இருந்தது.
சர்பராஸ் தொடர்ந்து தோள் கொடுக்க, மறுமுனையில் முகமது ஆமிரும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். இறுதியில் 44 ஆவது ஓவரின் 5ஆவது பந்தில், சர்பராஸ் அடித்த பவுண்டரியுடன் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. முக்கியமாக அரையிறுதிக்கும் தகுதியும் பெற்றது.
இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பின் மூலம் அருமையான வாய்ப்பை கோட்டைவிட்டுள்ளது. இந்த போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேற்றப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான். அதன்படி சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துஇ இந்தியாஇ பங்களாதேஷூடன் பாகிஸ்தானும் இணைந்துகொண்டது. இதன்படி அரையிறுதிக்கு மூன்று ஆசிய அணிகள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM