தம்பதிகள் வருடங்கள் பல சென்றும் கருத்தரிக்கவில்லை என்ற குறையில் பயணங்களை ஆரம்பிக்கின்றனர். இந்த பயணத்தின் பாதையில் எத்தனை தடைகளைத் தாங்க வேண்டி உள்ளது. ஆரம்பகாலத்தில் இதற்கான பயணம் இந்தியாவரை சென்று அங்கு மாதங்கள் பல தங்கியிருந்து சிகிச்சைகளைப் பெற்றனர். கர்ப்பம் தரிக்க தாமதமாகும் தம்பதிகளை சிகிச்சையளித்து கருத்தரிக்க வைப்பது ஒரு சவாலான விடயம். ஆனால் அதனை விட சவாலான விடயம் சிகிச்சைகள் மூலம் தங்கிய கருவை தக்க வைத்து கர்ப்பகாலத்தை பராமரித்து அவர்களது கையில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்து கொடுப்பது ஆகும்.
இதனைத்தான் IVF கர்ப்பகால பராமரிப்பு எனக் கூறுகின்றோம். (IVF Pregnancy) கடந்த காலங்களில் எமது மக்கள் இந்தியா சென்று செயற்கை முறை கருக்கட்டல் IVF மூலம் கருத்தரித்து பின்னர் அந்த கரு வளர்ந்து ஒரு குழந்தையாக பிரசவிக்கும் வரை உள்ள கர்ப்பகாலம் முழுவதுமே இந்தியாவில் தங்கியிருந்து பின்னர் கையில் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டே நாடு திரும்பினார்கள். இந்த 10 மாத கர்ப்பகாலம் தம்பதிகளை பொறுத்தவரை எந்த அளவு ஏக்கமும் அச்சமும் நிறைந்த காலம் என அவர்களைக் கேட்டால் தெரியும். இதனை அனுபவித்தவர்கள் இதன் வேதனையைச் சொல்லி இன்னொருவருக்குப் புரியவைக்க முடியாது.
இவ்வாறு கருத்தரிக்க பல மாதங்கள் இந்தியாவில் தங்கி பின்னர் கர்ப்பகாலத்தை தொடர இந்தியாவில் தங்கி தொடர்ந்து பிரசவித்த குழந்தையை சில மாதங்கள் அங்கு பராமரித்து பின்னர் நாடு திரும்புவது என்பது பல மாதங்கள் நிறைந்த காலமா? இல்லை ஓரிரு வருடங்களே போய் விட்டது. இந்த நீண்ட காலம் இந்தியாவில் சிகிச்சைக்கென தங்கும் போது இதற்கான செலவுகள் ஒரு புறம் இருக்க இந்த நீண்ட காலம் கணவன் மனைவி அங்கு தங்கியிருக்கும் போது அவர்களது வேலை வாய்ப்புகள் தொழில் என்பவற்றைக் கூட இழக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் இந்த நீண்ட கால லீவுகளினால் தமது வேலை வாய்ப்பை நிரந்தரமாக இழக்கும் பரிதாபம் ஏற்படுகின்றது. செலவுகள் பல நிறைந்த இக்காலகட்டத்தில் வேலை வாய்ப்பை இழப்பதும் வருமானம் இல்லாமல் வாழ்வதும் எங்கு போய் சொல்வது. இத்தனை சோகங்களையும் தமது மனிதில் தாங்கிக் கொண்டு பிறக்கப் போகும் தமது குழந்தைக்காக அவர்கள் ஆர்வமுடனும் அவதானத்துடனும் இருப்பது மிகவும் கடினமானதும் அதேவேளை ஒரு பாராட்டக்கூடியதுமான ஒரு விடயமாகும்.
இவ்வாறு எமது மக்கள் அங்கும் இங்குமாக இன்னல்களுடன் வாழும்போது நாம் அவற்றை கேள்விப்படுவதுடன் விட்டுவிட முடியுமா? இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாம் நமது மக்களது இன்னல்களுக்கு விடிவு காண்பது தான் முதல் கடமை. ஆகையால் அவர்களது செலவீனங்களை குறைக்கும் முகமாகவும் அவர்களது விடுமுறைகள் மற்றும் இந்தியாவில் தங்க வேண்டிய காலங்களை குறுகியதாக்குவதற்காகவும் நாம் என்ன செய்யலாம் என நினைத்தால் அதற்கு விடை என்ன?
இவ்வாறு செயற்கை முறையில் அதாவது IVF முறையில் கருத்தங்கியவர்கள் அடுத்ததாக பிரசவம் வரை இந்தியாவிலேயே தங்க வேண்டுமா அல்லது தமது நாடு திரும்பி கர்ப்பகாலத்தை சொந்த நாட்டிலேயே பராமரித்து பிரசவத்தையும் தமது நாட்டிலேயே பார்க்க முடியுமா என்ற தீர்மானத்தை முடிவு செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். இந்த முக்கிய முடிவை எடுப்பதற்கு பக்கபலமாக நாம் அண்மைக்காலமாக IVF முறையில் இந்தியாவில் கருக்கட்டிய தம்பதிகளை சில மாதங்களில் நாடு திரும்பியதும் அவர்களது கர்ப்பகாலத்தை கண்ணும் கருத்துமா கவும் பராமரித்து சவால்களையும் சோதனைகளையும் தாண்டி ஆரோக்கியமான குழந்தையைப் பிரசவித்து கொடுப்பது ஒரு ஆதாரமாகவுள்ளது.
இதன் மூலம் நன்மை அடைவது தம்பதிகள். அவர்கள் சிலர் மூன்று மாத கர்ப்பகாலத்திலும் சிலர் நான்கு ஐந்து மாத கர்ப்ப காலத்திலும் நாடு திரும்புகின்றனர். இவர்களில் சிலர் இரட்டைக் குழந்தைகளையும் தாங்கி வருகின்றனர். இந்தக் கர்ப்ப காலத்தில் வரக்கூடிய சிக்கல்கள் எவை என்று இப்போது பார்ப்போம். கர்ப்பகாலத்தில் குருதி அமுக்கம் அதிகரிக்க தொடங்கும் அதனை சரியாக கையாண்டு கர்ப்ப காலத்தை தொடர வேண்டியிருக்கும். இதனை விட மிகவும் சோதனையான விடயம் இந்த IVF கர்ப்ப காலத்தில் சீனியின் அளவு அதிகரித்து கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. இதன் போது சரியான உணவுப்பழக்கத்தாலும் இன்சுலின் ஊசியாலும் சீனியின் அளவை சரியாகக் கட்டுப்படுத்தி கர்ப்ப காலத்தை வென்றெடுக்க வேண்டி உள்ளது.
அடுத்து வரும் சிக்கல் கர்ப்பத்தில் வளரும் சிசு வளர்ச்சி குறையக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. இதனை நாம் ஒழுங்கான ஸ்கான் பரிசோதனைகள் மூலம் தகுந்த தருணத்தில் கண்டறிந்து பிரசவத்தை உரிய நேரத்தில் மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும். அதேபோல் சிலரின் குறைமாதப் பிரசவவலி ஆரம்பிக்கவாய்ப்பிருப்பதால் அதனையும் கண்டறிந்து கர்ப்பகாலத்தை தொடரவைப்பதற்கான சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. மேலும் சிலரின் குறைமாதத்தில் பன்னீர்குடம் உடைந்து போனால் அதற்கான உரிய பராமரிப்பை செய்து சிசுவைக் காப்பாற்றுவது அவசியம்.
இவ்வாறு செயற்கை முறைக்கருக்கட்டலின் (IVF) பின்னர் தோன்றக்கூடிய கர்ப்பகால சிக்கல்களை உடனுக்குடன் கண்டுபிடித்து அதற்குரிய பராமரிப்புகள், சிகிச்சைகள், வழங்கி கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்தையும் பேணவேண்டியது எமது கடமையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM