ஐக்கிய நாடுகளை சபை மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையின் சுயாதீனத்தன்மை மீது தலையீடு செய்கின்றார். எனவே அவரின் அநாவசிய தலையீடுகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடத்தில் முறைப்பாடு செய்யவுள்ளோம்.
அல் ஹுசைன் இலங்கையரிடத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப் போவதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தேசிய அமைப்புக்களுக்கான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாடு முகம் கொடுத்த அச்சுறுத்தலான நிலைமையை மக்கள் இன்று உணர வேண்டும். இல்லாவிடின் நாட்டில் நிலவும் ஒற்றையாட்சிக்கு பங்கம் ஏற்படக்கூடும். இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்மாதம் இடம்பெறவுள்ள அமர்வுகளில் கலந்து கொண்டும் வலியுறுத்துவோம்.
அண்மையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீதிமன்றத்தை அவதூறு செய்பவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை மையப்படுத்தியே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறிருக்கின்ற போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் சுயாதீன நீதிபதிகள் சட்டத்தரணிகளுக்கான விசேட பிரதிநிதி மொனிகா பின்டோ இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு குறித்து போலியானதும் பாரதூரமானதுமான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அவர் இலங்கையில் நீதிமன்றம் அரசியல் சார்புடன் செயற்படுகின்றது, நீதிபதிகள் ஓய்வுபெற்றதன் பின்னர் அரச துறைகளில் உயர்பதவியில் அமர்வதற்காக அரசாங்கத்திற்கு பக்கச்சார்பாக செயற்படுகின்றார்கள், தமிழ் பிரஜைகளின் வழக்குகள் காரணமின்றி காலம் தாழ்த்தப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
மேற்படி காரணங்களினால் நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். அவர் வெளிநாட்டு பிரஜை. ஆனால் மனோரி முத்துஹெட்டிகம தலைமையிலான நல்லிணக்க செயலணியை சேர்ந்த பதினொரு பேரும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். எனவே இவர்களுக்கு எதிராக எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் சட்ட நடவடிக்கை எடுப்போம்.
மேற்குறிப்பிட்ட நல்லிணக்கச் செயலணி நல்லிணக்கம் என்ற பெயரில் செய்யும் பரிந்துரைகளை தமிழ்ச் செல்வன் இருந்திருந்தால் கூட செய்திருக்க மாட்டார்.
அவ்வாறிருக்கின்ற போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் எமது நாட்டு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி கலப்பு நீதிமன்றத்தை பரிந்துரைக்கின்றார். அதனால் அவரை விடவும் அதிகாரங்களை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் தலைவரிடத்தில் செய்ட் அல் ஹுசைன் தொடர்பில் முறைப்பாடு செய்வோம்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களில் அல் ஹுசைனின் அழுத்தம் குறித்தும் நாம் முறைப்பாடு செய்வோம். அதேபோல் அவர் இலங்கை மக்களிடத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்துவோம். இன்றும் சம்பந்தன், விக்கினேஸ்வரன் உள்ளிட்டவர்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டாலும் தமிழ் மக்களுக்காக அவர்கள் ஒரு துளி இரத்தம் கூட வழங்கியதில்லை. மாறாக இராணுவத்தினரே வழங்கியுள்ளனர். அதனால் நாங்கள் இனவாதிகள் இல்லை என்பது தெரிகின்றது.
தமிழர்களுக்குள் உள்ள குல பேதத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகவே சிங்களவர்கள் தமிழர்களை தாக்குகின்றார்கள் என்ற கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கின்றார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM