பாதை ஒழுங்குகளை கவனத்தில் கொள்ளாது, ஒழுங்கு விதிமுறைகளை மீறி வாக னம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இன்று முதல் விசேட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதாக கொழும்பு நகர போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் சுமித் நிசங்க தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்த சட்ட நடைமுறையை கண்டிப்பான முறையில் அமுல் செய்வதை உறுதிப்படுத்த இந்த விசேட திட்டம் அமுல் செய்யப்படுவதாகவும், பாதை ஒழுங்கு, விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக மட்டும் சட்ட நடவடிக்கை எடுக்க விசேட குழுவினரை கடமையில் ஈடுபடுத்துவதாகவும், இதற்கு மேலதிகமாக 600 பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சி.சி.ரி.வி காணொளிகளின் உதவியையும் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித் தார்.
குறிப்பாக கொழும்புக்குள் உள் நுழை யும், கண்டி, கொழும்பு பிரதான வீதி, பேஸ்லைன் வீதி, ஹைலெவல் வீதி, ராஜகிரிய முதல் பொரளை வரையிலான வீதி, ராஜகிரிய முதல் பத்தரமுல்லை வரையிலான பகுதி, காலி வீதியின் பம்பலப்பிட்டி பகுதி, பஞ்சிகாவத்தை சுற்றுவட்டம் முதல் ஆமர் வீதி வரையிலான பகுதி, ஆமர் வீதி சந்தி முதல் பேலியகொடை வரையிலான பகுதி உள்ளிட்ட இடங்களில் இந் நடவடிக்கை தீவிரமாக அமுல் செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
1951 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்தின் 148 ஆவது அத்தியாயத்தின் 1 முதல் 5 வரையிலான உப அத்தியாயங்கள் ஊடாக பாதை ஒழுங்கு முறைமைகள் குறித்து கூறப்பட்டுள்ள நிலையில் அதனை மீறுவோருக்கு எதிராகவே தண்டம் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் சுமித் நிசங்க சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக சமிக்ஞை விளக்குகள் உள்ள பகுதிகளில் பல ஒழுங்கைகள் உள்ள போது ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் இடது புறத்தால் முந்திச் செல்லல், பின்னால் வந்து சமிக்ஞை விளக்குகளின் சமிக்ஞைக்காக காத்திருக்கும் வாகனங்களை முந்திக்கொண்டு பயணித்தல், தெளிவான இடம் இன்றி முந்திச் செல்லல், அபாயகரமாக முந்திச் செல்லல் உள்ளிட்டவை தொடர்பில் இன்று முதல் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
போக்குவரத்துத்துறை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்தன முனசிங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் பொலிஸ் அத்தியட்சகர் சுமித் நிசங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தனஞ்ஜய உள்ளிட்டோரின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறிப்பாக பாதைகளில் நெரிசல் உள்ள போது முச்சக்கர வண்டிச் சாரதிகளும் மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களும் அபாயகரமான முறையில் பயணிப்பது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், பாதையில் செல்லும் ஏனைய வாகனங் களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் பயணிக்கும் அனைத்து சாரதிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் சுமித் நிசங்க தெரி வித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM