ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை நாளை திங்கட்கிழமை விவாதிக்கப்படவுள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா .சிறப்பு அறிக்கையாளர் மொனிக்கா பின்டோவின் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையே இவ்வாறு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இதன் போது இலங்கையின் நீதிக் கட்டமைப்பு, மறுசீரமைப்பு குறித்து பரிந்துரைகள் முன் வைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஏற்கனவே பொறுப்புக்கூறல் மற்றும் உண்மைகளைக் கண்டறிதல் போன்ற விவகாரங்களில் அரசாங்கத்தின் உறுதிமொழிகள் தேசிய நீதி கட்டமைப்பின் முன் சவாலுக்கு உட்பட்டது. எனவே இந்த விடயம் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.
மேலும் தற்போதைய நிலைமைகள் குறித்தும் விவாதத்தின் போது உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளினால் கேள்விகள் எழுப்பப்படலாம் எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக அண்மைக்காலமாக மேலோங்கியுள்ள சிறுபான்மை மக்களின் மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களை அழித்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மொனிக்கா பின்டோ கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன் அவர் மே மாதம் 7 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருந்து பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த விஜயத்தில் சித்திரவதைகள் தொடர்பான ஐ. நா .சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டசும் கலந்து கொண்டிருந்தார்.
குறிப்பாக வடக்குக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மொனிக்கா பின்டோ அங்கு சிவில் சமூகத்தினரையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார். இவ்வாறு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் கண்டறிந்தவை குறித்த அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களே நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. மேலும் அறிக்கையை நீதிபதிகள் மற்றும் சட்டதரணிகளின் சுதந்திரம் தொடர்பான தற்போதைய ஐ.நா .சிறப்பு அறிக்கையாளர் டியேகோ கார்சியா சயனிடம் சமர்ப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM