இராணுவ வசமுள்ள கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கலை முன்னிட்டு தற்காலிகமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றுகாலை தொடக்கம் இந்த வீதி மக்களின் பாவனைக்காக திறந்து விட பட்டுள்ளதோடு மக்களும் அந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு தமது சொந்த கிராமமான கேப்பாபுலவில் தம்மை வாழ இராணுவம் அனுமதிக்க வேண்டும் என கோரி போராடிவரும் மக்கள் வீதியில் இருமருங்கிலுமுள்ள தமது காணிகளையும் பெரும் ஏம்பலிப்புடனும் ஏமாற்றத்துடனும் பார்த்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில் இன்று 103வது நாளாகவும் தமது சொந்த நிலங்களுக்கு செல்லவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடிவரும் மக்களுக்கு இந்த தற்காலிக பாதை திறப்பு ஏமாற்றம் அளித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களில் சிலர் தெரிவித்தனர்.
தாம் தமது காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்த்து போராடிவரும் நிலையில் வீதியை மட்டும் இந்த இராணுவம் தற்காலிகமாக திறந்து வைத்துள்ளது. நாமோ இந்த வீதியில் தொடர்ந்தும் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் இருந்தாலும் சொந்த நிலங்களுக்கு செல்லும்வரை போராடுவோம் எனவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM