ஜனாதிபதியால் பொதுமன்னிப்பளிக்கப்பட்ட ஜெனீவனின் அனுபவப் பகிர்வு

Published By: Priyatharshan

16 Jan, 2016 | 10:50 AM
image

சாப்­த­மொன்றை சிறையில் கழித்து விட்டேன். மீண்­டு­மொரு தசாப்­தத்தை சிறையில் கழித்­தா­க­வேண்­டு­மென உத்­த­ரவிட்­டுள்ளாள் நீதிதேவதை. பிறி­தொரு வழக்கு ஆறாண்­டு­க­ளாக கிடப்பில் இருக்­கின்­றது. எனது எதிர்­காலம் என்­னா­கப்­போ­கின்­றது? நமக்கு மட்டும் ஏன் தான் இந்த நிலையோ? இந்­தப்­பி­றப்பில் வாழ்வும் சாவும் எனக்கு இங்­கேதான்…! மேன்­மு­றை­யீடு செய்­ய­லாமா? எவ்­வாறு செய்­வது? யாரை பார்ப்­பது? நடப்­பது நடக்­கட்டும்…! ஆயிரம் கேள்­வி­களும் பதில்­களும் மன­துக்குள்.

ஜன­வரி ஐந்தாம் திகதி. அன்றும் வழ­மை­போன்றே எனது மனதில் அதே கேள்­வி­களும் பதில்­களும். வழ­மை­யான கட­மை­களை நிறைவு செய்து விட்டு சிறைக்­கூ­டத்தில் அமர்ந்­தி­ருந்­த­போது, ஜெனீவன் உங்­க­ளுக்கு விடு­தலை கிடைக்­கப்­போ­கின்­றது. ஜனா­தி­பதி பொது­மன்­னிப்­ப­ளிக்­க­வுள்ளார். தயா­ரா­க­வி­ருங்கள்.

அவ்­வார்த்­தைகள் நிறை­வுக்­குவந்த அந்­த­வொரு நொடி…! கன­விலும் நினைக்­காத விடயம்…! அள­வற்ற மகிழ்ச்சி…! எதிர்­பார்க்­காத தரு­ணத்தில் அனைத்­துமே மாறி­யது. என்­னு­டைய சிறைக்­கூ­டத்தில் இருந்­த­வர்கள் தமது பிரச்­சி­னை­களை மறந்து ஆரத்­த­ழு­வி­னார்கள். மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­னார்கள். நண்பா சென்­றுவா. எமக்கும் என்றோ ஒருநாள் விடியல் பிறக்கும் என்­றார்கள்.உனது விடு­தலை நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­ற­தென உறு­தி­யுடன் கூறி­னார்கள்.

தசாப்­­த­மொன்றில் ஏற்­பட்ட நட்­பு­களை, என்­னைப்­போன்றே குடும்­பத்­துடன் வாழத்­து­டிக்கும் நெஞ்­சங்­களை பிரிந்து நான் மட்டும் செல்­கின்­றேனே என்­ன­செய்­வது? மட்­டற்ற மகி­ழ்ச்சி ஒரு­புறம் மறக்­க­மு­டி­யாத வேத­னைகள் மறு­புறம் மன­துக்குள் குழப்­பங்கள் ஆயிரம். நடப்­ப­தெல்லாம் நன்­மைக்­கே­யென்று உணர்ந்தேன்.

ஜன­வரி எட்டாம் திகதி. ஆயி­ர­மா­யிரம் கேள்­வி­களை என்னை நானே ­கேட்­டுக்­கொண்­டி­ருக்­கையில் சிறைச்­சாலை அதி­கா­ரிகள் வந்­தார்கள். தம்­முடன் அழைத்துச் சென்­றார்கள். பலர் கூடி­யி­ருந்த அரங்கில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் முன்­னி­லையில் கொண்டு செல்­லப்­பட்டேன். எனக்கு பொது­மன்­னிப்பு வழங்­கு­வ­தாக அவர் அறி­வித்தார்.

நாட்டின் தலை­வ­ராக உய­ரிய மனப்­பான்­மை­யுடன் எனக்கு பொது மன்­னிப்­ப­ளிப்­பது ஜனா­தி­ப­தியின் பெருந்­தன்மை. அவ­ருக்கு எனது மன­மார்ந்த நன்­றிகள். சுதந்­திர மனி­த­னாக யாழ்ப்பாணத்­தி­லுள்ள எனது வீட்­டுக்கு திரும்­பினேன். என்னை எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்த அம்மாஇ அப்­பா­வுடன் மீண்டும் இணைந்து கொண்டேன்.

ஆம்இ எப்­ப­டி­யி­ருக்­கி­றீர்கள் என்ற வினா­வுடன் ஆச­னத்தில் அமர்ந்­த­போது புன்­மு­று­வ­லுடன் கட­க­ட­வென மேற்­கண்­ட­வாறு கூறி­விட்டு அமை­தி­யானார் யாழ்ப்­பாணம் அச்­சு­வேலி வல்­லை­வீ­தியில் வசித்­து­வரும் சிவ­ராஜா ஜெனீவன்.

சிவ­ராஜா, புஷ்­ப­ராணி தம்­ப­தி­க­ளுக்கு மூன்று ஆண்­பிள்­ளைகள். இரண்­டா­வது மக­னாக 1978ஆம் ஆண்டு பிறந்­தவர் ஜெனீவன். மக்கள் சேவையை பிர­தா­ன­மாகக் கொண்ட ஒரு தாதி­யாக செயற்­பட்டு வந்­தவர் சிவ­ராஜா. அள­வான வரு­மானம். அமை­தி­யான குடும்பம். மூன்று ஆண் பிள்­ளை­க­ளையும் கல்­வியில் சிறந்­த­வர்­க­ளாக்க வேண்­டு­மென்ற பேரவா ஏனைய பெற்­றோ­ரைப்­போன்றே சிவ­ராஜா தம்­ப­தி­யி­ன­ருக்கும் இருந்­தது.

அவ்­வா­றி­ருக்­கையில் 90களில் அசா­தா­ரண நிலை­மைகள் ஏற்­பட்­டன. குறிப்­பாக அச்­சு­வேலிப் பகு­தியில் ஷெல் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. படை முன்­ன­கர்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அத்­த­ரு­ணங்­களில் வீட்டை விட்டு வெளி­யே­று­வதும்இ சில நாட்கள் கழித்து வீட்­டுக்குச் செல்­வதும் இவர்­க­ளுக்கு வழ­மை­யா­கி­விட்­டது. எனினும் அச்­சு­வேலி மகா­வித்­தி­யா­லத்தில் கல்­வி­கற்­றுக்­கொண்­டி­ருந்த புதல்­வர்­களின் படிப்பு பாதிக்­கப்­ப­டப்­போ­கின்­றது என்­பதால் தற்­கா­லி­க­மாக யாழ்.நக­ரத்தில் மையத்தில் குடி­யே­றினர்.

இரண்­டா­வது புதல்­வனை யாழ்.செங்­குந்தான் பாட­சா­லையில் இணைக்­கப்­பட்டார். ஒரு­வ­ருடம் கழிந்த நிலையில் யாழ்.மத்­திய கல்­லூ­ரிக்கு மாற்­றப்­பட்டார். சாதா­ர­ண­மாக வாழ்க்கை நகர்ந்­து­கொண்­டி­ருந்­தது. கல்­வியில் சிறந்­த­வ­ராக விளங்­கி­யவர் ஜெனீ­வ­னுக்குள் போராட்ட குணம் ஏன்­வந்­தது?

ஆழ­மான பாதிப்பு

அச்­சு­வே­லியில் வசிக்­கும்­போது அவ்­வப்­போது ஷெல்­களும், விமா­ன­த்தாக்­கு­தல்­களும் நடை­பெ­று­வது வழ­மை­யாக­ி விட்­டது. இதனால் வீட்டை விட்டுச் செல்­வதும் மீண்டும் வரு­வதும் வழ­மை­யா­கி விட்­ட­போதும் நிம்­ம­தி­யாக இருக்க முடி­ய­வில்­லையே என்ற ஏக்கம் ஜெனீ­வ­னுக்கு ஏற்­பட்­டது.

அவ்­வா­றொ­ருநாள் ஷெல்கள் சர­மா­ரியாக வந்­த­போது அயல்­வீட்டில் வசித்த நண்­பனின் தாயார் உணவு சமைத்­துக்­கொண்­டி­ருந்த தரு­ணத்தில் அந்­த­ இ­டத்­தி­லேயே உயி­ரி­ழந்­து­விட்டார். அதன் தொடர்ச்­சி­யாக நவாலி ஆல­யத்தில் நடை­பெற்ற தாக்­கு­தலில் ஏற்­பட்ட இழப்­புக்கள். இவை அனைத்தும் ஜெனீ­வனை வெகு­வாக பாதித்­தன. இதனை நிறுத்­து­வ­தற்கு ஏதா­வது செய்­ய­வேண்­டு­மென்ற எண்ணம் துடிப்பு மிக்க இளம் வயதில் எழு­வது இயல்­பா­னது.

அதற்­க­மைய தன்­னை­யொரு விடு­தலை வீர­னாக கருதி சரி­யான தீர்­மானம் எடுக்­க­மு­டி­யாத அந்த வயதில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் 1994ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் தன்னை இணைத்­துக்­கொண்டார். அந்த அமைப்பில் இணைந்­து­கொண்ட ஜெனீ­வ­னுக்கு ஆயு­த­மேந்திப் போரா­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் பெரி­தாகக் கிட்­டி­யி­ருக்­க­வில்லை.

தந்தை தாதி­யென்­பதால் அரை­கு­றை­யாக தந்­தையின் தொழிலை அறிந்­தி­ருந்­த­மையால் விடு­த­லைப்­பு­லி­களின் மருத்­து­வப்­பி­ரிவில் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பே ஏற்­பட்­டது.

எவ்­வாறு கைது செய்­யப்­பட்டார்

2006ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து வவு­னியா நோக்கி பஸ்ஸில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­த­போது மின்­னே­ரியா பகு­தியில் திடீ­ரென பஸ் நிறுத்­தப்­ப­டு­கின்­றது.

சிவில் உடையில் திடீ­ரென வருகை தந்­த­வர்கள் ஜெனீ­வனை தம்­மோடு வரு­மாறு கூறு­கின்­றனர். ஏன்? எதற்கு? என்ற கேள்­வி­களை கேட்­ப­தற்கு கூட காலக்­கெடு வழங்­கப்­ப­டாத நிலையில் ஜெனீவன் அழைத்துச் செல்­லப்­ப­டு­கின்றார்.

மூன்று, நான்கு தினங்கள் எங்­கி­ருக்­கின்றோம் என்று கூட தெரி­யாத நிலையில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். பின்னர் பொல­ன்ன­று­வையில் தான் இருக்­கின்றேன் என்­பதை உணர்ந்­து­கொண்டார். பகலில் பொலிஸ் நிலை­யத்­திலும் இரவில் பிறி­தொரு இடத்­திலும் விசா­ர­ணைகள் தொடர்ந்­த­வண்ணம் இருந்­தன.

சிறிது காலத்தில் நான்காம் மாடிக்கு கொண்டு செல்­லப்­பட்டு விசா­ர­ணைகள் நடை­பெற்­றன. விசா­ர­ணைகள் அனைத்­துமே உண்­மையைக் கூறு என்ற கோணத்­தி­லேயே அமைந்­தி­ருந்­தன. எத்­த­னையோ தட­வைகள் சொன்­ன­தையே திரும்­பத்­தி­ரும்ப கூறிக்­கொண்­டி­ருந்­த­போதும் அதனை ஏற்­ப­தற்கு விசா­ர­ணை­யா­ளர்கள் தயா­ரா­க­வில்­லா­மை­யா­னது இன்றும் ஜெனீ­வ­னுக்கு கவ­லை­ய­ளிப்­ப­தா­கவே உள்­ளது.

நீதிமன்­றமும் சிறைச்­சா­லையும்

2006ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதி முதற்­த­ட­வை­யாக நீதி­மன்றில் முன்னால் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார் ஜெனீவன். அமைச்சர் மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சே­னவை (தற்போ­தைய ஜனா­தி­பதி) கொலை­செய்­வ­தற்­கான சதித்­திட்­டத்­துடன் தொடர்பு பட்­டுள்ளார். ஆகவே விசா­ர­ணைகள் தொட­ர­வேண்­டி­யி­ருப்­பதால் மேல­திக கால அவ­காசம் மன்றில் கோரப்­பட்­டது. அதற்­கான அனு­மதி வழங்­கப்­ப­டவும் அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்டார். சதித்­திட்டம் தீட்­டி­யமை தொடர்பில் மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு அனு­ரா­த­புரம் நீதி­மன்றில் இரண்டு வழக்­கு­களும் பிறி­தொரு வழக்கு யாழ்.நீதி­மன்­றிலும் தொட­ரப்­பட்­டி­ருந்­தது.

அதன் பின்னர் ஒக்­டோபர் மாதம் 22ஆம் திக­தி­யி­ருந்து பதி­னான்கு தினங்­க­ளுக்கு ஒரு­த­டவை நீதி­மன்றின் முன்னால் ஆஜர்­ப­டுத்­தப்­ப­டு­வதும் மீண்டும் தடுத்­து­வைக்­கப்­ப­டு­வ­து­மாக இருந்­தது. இவ்­வா­றான நிலை­மையில் மீண்டும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி மன்றில் ஆஜர் படுத்­தப்­பட்டு ஒரு­வ­ழக்கில் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்டு பூஸா சிறைச்­சா­லைக்கு மாற்­றப்­பட்டார்.

அதன் பின்னர் மேல­திக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மென்ற கார­ணத்­திற்­காக 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் 8ஆம் திகதி மீண்டும் அனுரா­த­புரம் சிறைச்­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டார்.

அங்கு குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் பெறப்­பட்­டது. அதற்­க­மை­வாக அனுரா­த­புரம் நீதி­மன்றில் 2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் மூன்றாம் திகதி தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விவ­சாய அமைச்­ச­ராக இருந்த காலப்­ப­கு­தியில் அவரைக் கொலை செய்­வ­தற்­காக சதி­மு­யற்­சியில் ஈடு­பட்டார் என்ற குற்­றச்­சாட்டில் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்டு பத்­து­வ­ருட சிறைத் தண்­ட­னையும் பத்­தா­யிரம் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

பத்­து­வ­ரு­டங்கள் சிறையில் காலத்தைக் கழித்த பின்னர் மீண்­டு­மொரு பத்­து­வ­ரு­டங்கள் சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றதே. தனது வாழ்க்கை சிறை­யி­லேயே நிறை­வ­டை­யப்­போ­கின்­றது. மேன்­மு­றை­யீடு செய்­வதா இல்­லையா என்ற தீர்­மா­னத்தை எடுக்­க­மு­டி­யாத நிலையில் அழுத்­தங்­க­ளுடன் இருந்தார் ஜெனீவன்.

பிறி­தொரு வழக்கு யாழ்.நீதி­மன்றில் நிலு­வையில் காணப்­பட்­டது. அந்த வழக்கின் மீதான விசா­ர­ணைக்­காக யாழ்.சிறைச்­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­போது சாட்­சி­

யா­ளர்­க­ளாக குறிப்­பிட்­ட­வர்கள் மன்­றிற்கு சமு­க­ம­ளிப்­பதே பெரும் பிரச்­சி­னை­யாக இருந்­தது. ஏறக்­கு­றைய ஆறு ஆண்­டு­க­ளாக அவர்கள் சமுகம் தந்­தி­ருக்­காத நிலையில் தனக்­காக தானே போராட ஆரம்­பித்தார் ஜெனீவன்.

டிசம்பர் 7ஆம் திக­தி­யி­லி­ருந்து உண்­ணா­வி­ர­தத்தை மேற்­கொண்டார். தனது வழக்கை விசா­ர­ணைக்கு எடுக்­க­வேண்­டு­மெனக் கோரினார். விரைவில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மென்ற வாக்­கு­று­தி­யுடன் உண்­ணா­வி­ரதம் தற்­கா­ல­ிக­மாக கைவி­டப்­ப­ட­வேண்­டி­ய­தா­யிற்று.

என்­றுமே மறக்­க­மு­டி­யா­தவை

மறு­பட்ட விசா­ர­ணைகள்இ தீர்ப்­புக்கள் என்­பன குறித்து தற்­போதும் விமர்­சிக்­கவோ பேசவோ விரும்­பாத ஜெனீ­வ­னுக்கு நான்கு சுவர்­க­ளுக்குள் ஐந்து முதல் ஆறு­பே­ருடன் இயற்கை உபா­தை­களைக் கூட மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட காலத்தில் கழிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­த­மையும், இர­வு­நே­ரங்­களில் இயற்கை உபா­தை­களை கழிப்­ப­தற்­காக எதிர்­கொண்­டி­ருந்த நெருக்­க­டி­க­ளையும் என்­றுமே மறக்­க­மு­டி­யா­த­தா­க­வுள்­ளது.

அது மட்­டு­மன்றி சிறைக்­கூ­டத்தில் இருக்கும் ஏனை­ய­வர்கள் எந்த மன­நி­லை­யுடன் இருப்­பார்கள். அவர்­க­ளுடன் என்­ன­பே­சு­வது என்­பதைக் கூட நினைக்­க­மு­டி­யா­த­தொரு நிலை­மையே இருந்­தது. ஆகவே ஒரு­வ­ரை­யொ­ருவர் எவ்­வாறு அணு­கு­வது என்ற மன­நி­லையில் அமை­தி­யா­கவே நீண்ட பொழு­துகள் கழிந்­து­கொண்­டி­ருக்கும். ஒரு கட்­டத்தில் உள­ரீ­தி­யான ஆலோ­ச­னை­களை பெறு­வ­தற்கு கோரு­வோமா என்ற மனோ­நிலை கூட எழுந்த சந்­தர்ப்­பங்­க­ளு­முண்டு.

இதற்கும் மேலாக விசா­ர­ணை­களின் போதும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் போதும் மொழி ரீதி­யான பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­த­மையும் அதனை பயன்­ப­டுத்தி சில ஏமாற்று வார்த்­தைகள் மூலம் கையொப்­பங்கள் பெறப்­பட்­ட­மையும் இன்றும் ஆழ் நெஞ்சில் உறைந்­து­போ­யுள்­ளன.

நானே சாட்­சியம்

தற்­போது அர­சியல் கைதி­களாக உள்­ள­வர்­களை விடு­தலை செய்­யக்­கூ­டாது. அவர்கள் விடு­விக்­கப்­பட்டால் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கி­விடும் என்­றொரு கருத்து பிர­தா­ன­மாக தென்­னி­லங்­கையில் கூறப்­பட்டு வரு­கின்­றது.

நான் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் செயற்­பட்­டி­ருந்தேன் என்­ப­தனை மறு­த­லிக்கவில்லை. ஆனால் தற்­போது அனை­வ­ரி­னதும் மன­நிலை மாறு­பட்­டு­விட்­டது. சிறைச்­சா­லை­யி­லி­ருந்து வெளியில் வந்து மீண்டும் போரா­ட­வேண்­டு­மென்ற எண்­ண­மில்லை. உற­வு­க­ளுடன் எஞ்­சிய காலப்­ப­கு­தியை தொட­ரவே அனை­வரும் ஏங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இதனை புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதற்கு நானே சாட்­சி­ய­மா­க­வுள்ளேன் என வலி­யு­றுத்தும் ஜெனீபன் யுத்­தத்­துடன் நேர­டி­யாக தொடர்பு கொண்ட 12 ஆயிரம் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் விடு­விக்­கப்­பட்டு சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்­ளார்கள். விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் முக்­கி­யஸ்­தர்­க­ளான கருணா அம்மான்இ கே.பி போன்­ற­வர்கள் இலங்­கையின் அத்­தனை சட்­டங்­க­ளுக்­குள்­ளி­ருந்தும் எவ்­வாறோ காப்­பற்­றப்­பட்­டி­ருக்கும் நிலையில் திட்­ட­மி­டாது ஏதே­வொரு கார­ணத்தால் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு உத­வி­னார்கள்இ சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் மட்டும் தொடர்ந்து சிறை­களில் இருப்­பது எந்த அடிப்­ப­டையில் நியா­ய­மா­னது என்ற வினா­வையும் முன்­வைத்தார்.

புரி­யாத வலிகள்

எனக்கு பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­ப­டு­கின்றேன் என்ற தக-வல் சிறைச்­சா­லை­யெங்கும் பர­வி­யது. விடு­தலை செய்­யப்­ப­டு­வ­தற்­காக என்னை சிறை அதி­கா­ரிகள் அழைத்­தனர். அவர்­க­ளுக்கு பின்னால் நான் சென்றேன். எனது கால­டிகள் ஒவ்­வொரு சிறைக்­கூ­டங்­க­ளையும் கடந்­த­போது கம்­பி­க­ளுக்கு நடுவில் புன்­மு­று­வ­லு­டனும், ஆனந்தக் கண்­ணீ­ரு­டனும் என்னை வழி-­ய­னுப்பி உற­வு­களின் உள்­ளத்தில் இருக்கும் வலி­க­ளையும் ஏக்­கங்­க­ளையும் கூறு­வ­தற்கு வார்த்­தை­களே இல்லை… பெருமூச்சோடு நிறுத்திக்கொண்டார் ஜெனீவன்.

நான் சாதாரண ஒரு பொது மகன். எனக்கு அதிகாரங்கள் இல்லை. எனினும் அந்த வலிகளையும், ஏக்கங்களையும் முழுமையாக உணர்ந்தவன் என்ற அடி-ப்படை-யில் அவர்களின் விடுத-லைக்காக குரல்கொடுப்பதற்கோ அல்லது எந்தவிதமான செயற்பாடுகளை முன் னெ-டுப்பதற்கோ சந்தர்ப்பமொன்று ஏற்படுமாயின் நான் முழுமையான மனதுடன் ஈடுபடுவேன் என்பதில் மாற்-றுக்க-ருத்தில்லையென உறுதியாக கூறிவிட்டார்.

நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக பெருந்தன்மையுடன் எனக்கு மன்னிப்ப-ளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நெஞ்சங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்ற கோரிக்கை-யையும் அவர் முன்-வைக்க தவறவில்லை.

புதிய சூழலும் அடுத்த கட்டமும்

ஒருதசாப்த இடைவெளியில் மீண்டும் சமூகத்துடன் இணைந்துகொண்டுள்ளேன். எனக்கு நண்பர்கள் யாருமில்லை. முன்-னேற்ற-கரமான சமுதாயத்தில் பத்தா-ண்டு-கள் பின்னிலையடைந்திருக்கின்றேன்.

சுயமுயற்சியால் சிங்களமொழியை கற்றுக்கொண்ட எனக்கு தற்போது 38 வயதாகின்றது. வேலைதேடுவதானால் கல்வி சான்றிதழ்கள் தேவை. கல்வியை தொடருவதென்றால் பாடசாலைக் கல்வியை பாதியில் விட்டுச் சென்ற நான் எங்கிருந்து ஆரம்பிப்பதென்றொரு கேள்வி-யெ-ழுகின்றது. வெளிநாடு செல்லும் எண்ணமுமில்லை. அடுத்த-கட்டம் என்ன-செய்வ-தென்று இது-வரையில் சிந்தி-க்க-வில்லை. நம்பிக்கையுள்ள-தென்கிறார் ஒரு-மணிநேரம் கடந்தும் மீண்டும் அதே புன்முறு-வல் பூத்த முகத்துடன்…!

கசப்பான அனுபவங்களுடன் கடி-ன--மான பதையினை கடந்து வந்த ஜெனீவனின் எதிர்காலம் சிறப்பானதாக அமை-வற்கு வாழ்த்துக்கள். கடல்நீந்திக் கரையேறியவரை கைகொடுத்து தரையுயர்த்துவதே சாலச்சிறந்தது.

( ஆர். ராம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13