சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டத்தில் இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதுகின்றன.
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 8 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கை அணி ‘பி’ பிரிவில் உள்ளது. தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.
இந்நிலையில் இலங்கை அணி இந்தியாவை இன்று எதிர்கொள்கிறது. தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்திருந்தது.
அதேவேளை இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியீட்டியுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் விளையாடும் இரண்டாவது போட்டியாக இன்று நடைபெறவுள்ள போட்டி அமையவுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதே அதிரடி இன்றைய ஆட்டத்திலும் நீடிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் தென்னாபிரிக்காவிடம் 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. உண்மையைச் சொன்னால் இலங்கை வீரர்களின் ஆட்டம் மோசமாகத்தான் இருக்கிறது.
உடல் தகுதி இல்லாததால் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் கடந்த போட்டியில் ஆடவில்லை.
இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் மெத்தியூஸ் களமிறங்கவுள்ளார். ஆனால் அவர் இந்தப் போட்டியில் துடுப்பாட்ட வீரராக மட்டுமே செயற்படுவார் என்றும் பந்துவீச மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் உபுல் தரங்க 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் தரங்க விளையாட மாட்டார் என்பது இலங்கைக்கு பின்னடைவே.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் இலங்கை பலவீனத்துடன் காணப்படுகிறது. லசித் மலிங்க இந்தியாவுக்கு அச்சுறுத் தலாக இருப்பார். சங்கக்கார கூறியது போல இலங்கை அணி கர்வத்துடன் இந்தப் போட்டியில் விளையாடி னால் இந்திய அணியை வீழ்த்தி விடலாம். பொறுத் திருந்து பார்ப்போம் இந்தப் போட்டியில் சாதிக்கப்போவது யார் என்று.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM