மாத்தளை பிரதேசத்தில் சுற்றாடலை அசுத்தமாக வைத்து டெங்கு நுளம்புகள் பரவ காரணமாகவிருந்த 141 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மூலம் சுமார் 2,28,000 ரூபா அபராதமாக நீதிமன்றங்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஐ.பி.டி.சுகதபால தெரிவித்தார்.
கடந்த ஐந்து மாதங்களாக மாத்தளை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் போதே டெங்கு நுளம்பு பரவ காரணமாக விருந்த 141 பேர் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர் டி.ஜி.குமாரசிறி தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு அபி
விருத்திக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
இதுபோன்ற திடீர் பரிசோதனைகள் தொடர்ந்தும் இப்பிரதேசங்களில் மேற்கொ ள்ளப்பட்டு வருவதாகவும் அவர் இங்கு சுட்டிக் காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM