"பௌத்த கோட்பாட்டு பின்னணியினால் இலங்கை மக்களின் இதயங்கள் தியாகத்தினாலும் மனிதாபிமானத்தினாலும் நிறைந்துள்ளன"

Published By: Robert

07 Jun, 2017 | 09:49 AM
image

உலகில் எந்தவொரு நாட்டிலும் காணமுடியாத தியாகமும், மனிதாபிமானமும் இலங்கை மக்களிடையே காணப்படுவதற்கு பௌத்த கோட்பாட்டு பின்னணியிலான சமூக சூழலே காரணமாகுமென ஜனாதிபதி தெரிவித்தார். 

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது அன்பு, கருணை மற்றும் தியாக  சிந்தையுடன் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பக் கண்ணீருடன் இணைந்து அவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக அனைத்து மக்களும் ஓரணியில் திரண்டதற்கு பௌத்த தத்துவத்தின் அடிப்படையிலான உன்னத மனிதாபிமான பண்புகள் இலங்கை மக்களின் இதயங்களில் நிறைந்துள்ளமையே காரணமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

நேற்று பெந்தர விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புத்தபிரானின் திருவுருவ சிலையை திறந்து வைத்தல் மற்றும் வண. பெந்தர ஜினாநந்த தேரருக்கு சங்கநாயக்கர் பதவியை வழங்கும் நிகழ்வு ஆகியவற்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பெந்தர நகருக்கு பெரும் ஆசீர்வாதத்தை தரும், உள்நாட்டு, வெளிநாட்டு மக்களை கவரக்கூடியவாறு பெந்தர நகரில் நிர்மாணிக்கப்பட்டள்ள புத்தபிரானின் திருவுருவ சிலையின் நினைவு பலகையை ஜனாதிபதி திரைநீக்கம் செய்து, வழிபாட்டுக்காக திறந்து வைத்தார். 

வண.பெந்தர ஜினாநந்த தேரரின் சமய, சமூக சேவைகளைப் பாராட்டி காலி கோரளையின் பிரதம சங்கநாயக்கர் பதவி வழங்கப்பட்டது. தேரருக்கான நினைவுப் பரிசு ஒன்றும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59