எம்மில் பல இளம்பெண்கள் தற்போது பெசன் என்று சொல்லிக்கொண்டு உயர்குதிகால் காலணியை அணிந்துகொள்கிறார்கள். முன்பெல்லாம் ஏதாவது விருந்து என்றால் மட்டுமே இதனை அணிந்தார்கள். தற்போது இதனை அடிக்கடி அணிந்து கொள்கிறார்கள். இதனால் இவர்களின் நடைமாறிவிடுகிறது. அதை விட பெரிய ஆபத்தைச் சந்திக்கிறார்கள்.
நடக்கும் போதோ அல்லது மாடிப்படிகளிலிருந்து இறங்கும் போதோ எதிர்பாராமல் நிலைதடுமாறி விழுந்துவிடுகிறார்கள்.இதனால் மூட்டுகளில் இருக்கும் தசை நார் கிழிந்துவிடுகிறது அல்லது விலகிவிடுகிறது அல்லது ஏதேனும் பாதிப்பிற்குள்ளாகிவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் லிகமெண்ட் டர் (Ligament Tear) என்று குறிப்பிடுகிறார்கள்.
எம்முடைய உடலில் உள்ள மூட்டுகளின் இணைப்புப் பகுதியில் இரண்டு எலும்புகளை ஒன்றிணைக்கும் தசை நார்கள் உள்ளன. இந்த தசை நார்கள் தான் நாம் நடக்கும் போதும், ஓடும் போதும், வேகமாக மாடிப்படி ஏறி இறங்கும் போதும் இரண்டு மூட்டு எலும்புகளையும் தாங்கிப் பிடித்து நகர்ந்துவிடாமல் பாதுகாக்கிறது.
விளையாட்டுவீரர்கள், நாட்டியத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் பயிற்சியின் தன்மையைப் பொறுத்து தசை நார்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தசை நார் பாதிக்கப்பட்டால் அங்கு உடனடியாக மூட்டுகள் இணையாமல் இருக்கும். இதனால் அப்பகுதியில் வீக்கம், வலி, அசைக்கமுடியாதிருத்தல் போன்றவை ஏற்படும்.
இதனிடையே எம்முடைய உடலில் உள்ள தசைநார்கள் இயல்பிலேயே நெகிழ்வு தன்மை கொண்டது. இருந்தாலும் அந்த நெகிழ்வு தன்மை முதுமை மற்றும் அதிகப்படியான பிரயோகத்தின் காரணமாக பாதிக்கப்படலாம். இவை பாதிக்கப்பட்டால் அவற்றின் நெகிழ்வு தன்மை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பாது. இந்நிலையில் உடனடியாக இதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அலட்சியப்படுத்தினாலோ அல்லது உடனடி நிவாரணத்தை எடுத்துக் கொண்டாலோ பாதிப்பின் வீரியம் அதிகமாக மூட்டு தேய்மான பிரச்சினை உருவாகக்கூடும். இன்றைய திகதியில் இதற்காகவே ஓர்த்றோஸ்கோப்பி சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இந்த சிகிச்சையின் மூலம் தசை நார்களின் பாதிப்பினை முழுமையாக சீராக்கலாம். அதே சமயத்தில் இவ்வாறான சிகிச்சையின் போது ஒரு மாத கால அளவிற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதனை புறகணிக்காமல் முழுமையாக பின்பற்றினால் இந்த பாதிப்பிலிருந்து குணமடையலாம்.
Dr.விஜய்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM