நாட்டில் தென்னிலங்கை மற்றும் மலையாக பகுதிகளில் தொடர்ந்தும் மலையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்வதுடன் ஏழு மாவட்டங்களின் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தில் காணமால் போன 79 பேரை தேடும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 681 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 83 ஆயிரத்து 831 ஆக உள்ளதுடன் 6 ஆயிரத்து 270 குடும்பங்களை சேர்ந்த 21 ஆயிரத்து 681 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை 224 ஆக உள்ள நிலையில் காணாமால் போனார் 79 பேரை தேடும் பணிகளை பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே ஏழு மாவட்டங்களுக்கான அனர்த்த எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு தொடர்கின்றது. குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் பட்சத்தில் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.அதேபோல் மண்சரிவு எச்சரிக்கை காரணமாக களுத்துறை - புளத்சிங்கள திப்பொட்டாவ மலை பகுதியில் இருந்து 22 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தென்னிலங்கையின் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பெரும்பாலும் சாதாரண நிலைமையை அடைந்துள்ளது. பாதிக்குக்கு உள்ளான சப்ரகமுவ மாகாணத்தின் சேதமடைந்த 10 பாடசாலைகள், கிழக்கு மாகாணத்தின் சேதமடைந்த 10 பாடசாலைகள் மற்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ள 25 பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை ஹம்பாந்தோட்டை, காலி ஆகிய மாவட்டங்களின் வெள்ள நீர் வடிந்தோடியுள்ள போதிலும் ஒருசில பகுதிகளில் நான்கு அடி அளவில் நீர் தேங்கி நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மருத்துவ வசதிகளையும், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான நிவாரண பொருட்களையும் வழங்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தமது மீட்பு மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM