இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.
சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி யுவராஜ் சிங், விராட் கோலி, பாண்டியா உள்ளிட்டவர்களின் அதிரடியுடன் 320 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தியாவின் முதல் 4 ஆட்டக்காரர்களும் அரைச் சதம் கடந்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஷர்மா (91), ஷிகர் தவாண் (68), கோலி (81), யுவராஜ் சிங் 32 பந்துகளில் 53 ஓட்டங்கள் என பெற்றிருந்தனர். கடைசியாக ஆட வந்த பாண்டியாவும் 3 சிக்ஸர்களுடன் 6 பந்துகளில் 20 ஓட்டங்களை விளாசி அசத்தினார்.
இந்தியா நிர்ணயித்த 320 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் பொறுமையாகவே தனது ஆட்டத்தை தொடங்கியது. 5ஆவது ஓவர் முடியும் முன் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆட்டம் மழையால் வீணானதால் இலக்கு 41 ஓவர்களுக்கு 289 என மாற்றப்பட்டது.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 9ஆவது ஓவரில் ஷேஸாத்தை 12 ஓட்டங்களுக்கு இழந்தது. அடுத்த சில ஓவர்களிலேயே பாபர் அஸாம் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் அசார் அலி, முகமது ஹாபீஸ் இணை பொறுப்புடன் ஆடி ஓட்டங்களை சேர்த்து வந்தது. ஹாபிஸ் 64 பந்துகளில் அரை சதம் எட்டினார். ஆனால் அந்த ஓவரிலேயே ஜடேஜா வீசிய பந்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
மீதமிருந்த 20 ஓவர்களில் 198 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இருபதுக்கு 20 போட்டியைப் போல ஆட வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது. இதை உணர்ந்து ஷோயிப் மலிக், சிக்ஸர், பவுண்டரி என விளாச ஆரம்பித்தார்.
ஷோயிப் மலிக் 9 பந்து களில் 15 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, 24ஆவது ஓவரில், உமேஷ் யாதவ் வீசிய பந்தை சற்று தடுமாற்றத்துடன் தட்டி விட்டு ஓட்டம் ஒன்றை எடுக்க முயன்றார். ஆனால் மறுமுனை யில் இருந்த ஹாபீஸ் வர வேண் டாம் என மறுக்க, ஷோயிப் மலிக் மீண்டும் திரும்பி ஓடி எல்லைக்குள் நுழைவதற்குள் ரவீந்திர ஜடேஜா பந்தை எடுத்து விக்கெட்டை நோக்கி எறிந்தார். ரன் அவுட் ஆன ஷோயிப் மலிக் பெவிலியன் திரும்பினார். ஷோயிப் மலிக் ஆட்டமிழந்தது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழக்க ஆரம்பித்தனர்.
உமேஷ் யாதவ் வீசிய 34 ஆவது ஓவரில் அடுத்தடுத்து ஆமிர், ஹஸன் அலி இருவரும் ஆட்டமிழக்க, 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கடைசி பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் உடல்நலம் சரியில்லாததால் ஆடவரவில்லை. ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தெரிவுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM