களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீரை முறையாக முகாமைத்துவம் செய்யாமையே கடந்த நாட்களில் ஏற்பட்டிருந்த பெரு வெள்ளத்திற்கு காரணமாகும்.
1968 இல் ஐக்கிய அமெரிக்க நிறுவனமொன்றினால் விடுக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் 2001 ஆம் ஆண்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்த திட்டத்தை நிறுவியிருந்தால் வெள்ளம் ஏற்பட்டிருக்காது எனவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நாட்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் தொடர்பாக பலர் பலவித கருத்துக்களை தெரிவிப்பதை அவதானிக்க முடிந்துள்ளது. நாம் சிந்திக்க வேண்டியது என்னவெனில் இப் பெருவெள்ளம் ஒரு நாடாக எம்மை முக்கிய தீர்மான மையம் ஒன்றுக்கு கொண்டு வந்துள்ளது.
நாம் முதலில் வெள்ளத்தை பற்றியே சிந்திக்க வேண்டும். பராக்கிரமபாகு கூறியதை போன்று பூமியில் விழும் ஒவ்வொரு நீர்துழியும் வீண்போகாமல் நீர்பாசனத்துக்கு சென்றிருக்குமானால் இன்று இப்படியானதொரு அழிவு ஏற்பட்டிருக்காது.
2003 ஆம் ஆண்டை போன்று நீர் பெருக்கெடுத்து ஒடுவதை கட்டுப்படுத்த முறையான முறைமையொன்று செயற்படுத்தப்படாமையினால் வீட்டு கூரைகளுக்கு மேல் நீர் பெருக்கெடுத்திருந்தது. இதனால் சமயலறை பொருட்கள் வீ்ட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உடைமைகள் யாவும் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது.
2003 ஆம் ஆண்டை போன்றே இன்னும் இரண்டு மாதங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இடருக்கு உட்பட்ட பகுதிகளையும் மக்கள் வாழ்க்கையும் விரைவாக சீராக்க முடியும். அரச நிறுவனங்களான இடர் முகாமைத்துவ அமைச்சு உள்நாட்டு அலுவல்களை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, உள்ளிட்டவை மிகவும் அர்பணிப்புடன் செயற்ட்டிருந்தன.
தற்போது நாம் இப்பிரச்சினையை சரியாக புரிந்துக்கொள்ளாவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் இதுபோல் 200 அல்ல 20 ஆயிரம் உயிர்களை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில் இவ்வெள்ளத்தை முற்றாக இல்லாமல் செய்ய முடியும் என நாம் கூறுகின்றோம்.
பொதுமக்களும் அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இது சாத்தியமாகும். ஜிங் கங்கையின் நீரை முறையாக முகாமைத்துவப்படுத்தாமையே இவ்வாறானதொரு வெள்ள அனர்த்தம் எற்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனம் ஒன்று இலங்கைக்கு 1968 ஆம் வழங்கிய ஆய்வறிக்கை ஒன்றில் ஜிங் கங்கை, நில்வள கங்கை, களு கங்கை ஆகிய மூன்று நதிகளுக்கும் செல்லும் நீரை நாம் முறையாக பாதுகாக்காத பட்சத்தில் அதனை அண்மித்து வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கள 2001 ஆம் ஆண்டில் ஜிங் கங்கைக்கு ஒரு அணை கட்ட வேண்டும் என்று கூறியிருந்தார் அதனை நில அபகரிப்பு என்றும் சதி முயற்சி என்றும் அரசியல் சக்திகள் எதிர்த்தது போலவே மக்களையும் தூண்டி விட்டார்கள். எனவே அன்று நாம் அந்த பாதுகாப்பான செயன்முறையை மேற்கொண்டிருந்தால் இன்று அழிவு நேர்ந்திருக்காது. அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2001 ஆம் ஆண்டு ஜிங் கங்கை பெரு அணை ஒன்றை நிர்மாணிக்கு பிரேரணையில் சீன அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றிணையும் செய்ய தீர்மானித்திருந்தார்.
அதனால் 60 வருடங்களுக்கு? முன்பாக குறிப்பிடப்பட்ட மேற்படி ஆய்வறிக்கையின் படி மேற்படி மூன்று நதிகளிலும நீர் வழிந்தோடும் பகுதிகளை அறிந்து அதன் அணைகளை கட்டும் பட்சத்தில் மேற்பட்டி வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும். அதேபோல் காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மின் உற்பத்தி செய்யவும் முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM