எலும்பு மஜ்ஜை என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக இரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் பிளேட்லெஸ் என மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இதில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஓக்ஸிஜனை நுரையீரல் மூலமாக உடலிலுள்ள மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை சிவப்பணுக்கள் செவ்வனே செய்கின்றன. அதே தருணத்தில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பக்டீரியாக்கள் இரத்தத்தை அடைந்துவிடாமல் தடுக்கும் பணியை வெள்ளையணுக்கள் திறம்பட செய்கின்றன.
எம்முடைய உடல்களில் பலவிதமான வெள்ளையணுக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்திக்கான வேலையை செய்வதும் வெள்ளையணுக்களே. பிளேட்லெஸ் அணுக்களின் எண்ணிக்கை ஒருவருக்கு இயல்பை விட குறைந்து விட்டால், உடலிலிருந்து இரத்தம் வெளியேறும். அதாவது ஒருவருக்கு அடிபட்டவுடன், அந்த இடத்தில் உள்ள இவ்வகையான அணுக்கள் ஒன்று கூடி வெளிப்படும், இரத்தத்தை கட்டியாக்கி விடும். இந்த மூன்றின் இணைவு தான் எலும்பு மஜ்ஜை எனப்படும்.
இந்த எலும்பு மஜ்ஜைகள் பலவீனமடைந்தால் லுகேமியா எனப்படும் நோய் உருவாகும். இதுவும் புற்று நோயின் ஒரு வகையே. லிம்ஃபோமா எனப்படும் ஒரு வகையான புற்றுநோயும் எலும்பு மஜ்ஜையின் பாதிப்பில் ஏற்படுவதே. எலும்பு மஜ்ஜையில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளையணுக்கள் செயல்பட இரும்புச் சத்து மற்ற விற்றமின்கள் தேவை. இத்தகைய விற்றமின் சத்துகள் எம்முடைய உடலில் போதுமான அளவில் இல்லையெனில் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளையணுக்களின் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை உருவாகி, பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றில் எப்லாஸ்டிக் அனிமீயா என்று குறிப்பிடப்படும் மிக அரிய வகை பாதிப்பும் அடங்கும்.
பொதுவாக பிறந்த குழந்தை அனிமீக்காக இருந்தால், அவர்களின் எலும்பு மஜ்ஜையைப் பரிசோதித்து, அவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதாவது தலசீமியா என்று குறிப்பிடப்படும் குறைபாடு இருந்தால், மாற்று எலும்பு மஜ்ஜையை அந்த குழந்தையின் இரத்த தொடர்புடையவரிடமிருந்து பெற்று சத்திர சிகிச்சை செய்து, அந்த குழந்தையை காப்பாற்றுவார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM