இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு இலவச மின் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் மீள் புதுப்பிக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மின் விநியோகத்தில் ஏதேனும் தடை மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்குமாயின் 0113030303 என்ற அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் அமைந்துள்ள மின்சார பாவனையாளர் மத்திய நிலையத்தில் மின்விநியோக நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாடளாவிய ரீதியிலான மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தனர். குறித்த அனர்த்த நிலைமைகளின் போது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பாதிப்பேற்பட்டுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் குறித்த பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் காணப்படும் மின்சார கட்டமைப்புக்கள் சீரமைக்கப்பட்டு தடையற்ற மின்சாரத்தை வழங்க எதிர்பார்த்துள்ளோம். அந்த வகையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 25 ஆயிரம் மின்சார பாவனையாளர்களுக்கான மின் விநியோகத்தடை ஏற்பட்டிருந்தது. அவர்களில் ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 775 பேருக்கான மின்விநியோகமே தற்போது வழங்கப்படவுள்ளது.
தென் மாகாணத்தில் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 130 பேருக்கான மின் விநியோகத்தடை ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களில் 1 இலட்சத்தி 89 ஆயிரத்தி 300 பேருக்கான மின் விநியோகம் வழங்கப்பட விருக்கின்றது.
இந் நிலையில் முற்றாக வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச மின் இணைப்பை வழங்கவுள்ளதுடன் தற்காலிக கூடாரங்களில் தங்கியிருப்பவர்களுக்கு 6 மாத காலப்பகுதிக்கு இலவச மின்சாரத்தை வழங்கவும், மின்மானியில் ஏதேனும் பாதிப்பேற்பட்டிருக்குமாயின் அதனை திருத்துவதற்கும் நிலுவைத்தொகையினை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசத்தினை வழங்குவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
அத்துடன் அனர்த்தம் காரணமாக மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டிருக்குமாயின் அல்லது பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் அமைச்சின் 0113030303 என்ற அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM