சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு? கோலாகலமாக இன்று ஆரம்பம்;  8 அணிகள் களத்தில்

Published By: Priyatharshan

01 Jun, 2017 | 11:27 AM
image

8 நாடுகள் பங்­கேற்கும் சம்­பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று இங்­கி­லாந்தில் ஆரம்­ப­மா­கின்­றது.

இந்தத் தொடரின் முதல் போட்­டியில் ‘ஏ’ பிரிவில் இடம்­பெற்­றுள்ள இங்­கி­லாந்து மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் மோது­கின்­றன.

‘மினி உலகக் கிண்ணம் என்று அழைக்­கப்­படும் ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணம் 1998ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது.

1998ஆம் ஆண்டு பங்­க­ளா­தேஷில் நடை­பெற்ற முதல் தொடரில் தென்­னா­பி­ரிக்க அணிமேற்­கிந்­தியத் தீவு­களை வீழ்த்தி கிண்­ணத்தை வென்­றது.

இது­வரை 7 சம்­பியன்ஸ் கிண்ணத் தொடர்கள் நடை­பெற்­றுள்­ளன. முதல் 2 தொடர்களும் ஐ.சி.சி. 'நொக் அவுட்' கிண்ணம் என்று அழைக்­கப்­பட்­டன. இதில் இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா ஆகிய அணிகள் அதி­க­பட்­ச­மாக தலா இரண்டு முறை கிண்­ணத்தை வென்­றுள்­ளன. 

இந்­திய அணி 2002 ஆம் ஆண்டு இலங்­கை­யுடன் இணைந்து கூட்­டாக வென்­றது. தென்­னா­பி­ரிக்கா, நியூ­ஸிலாந்து, மேற்­கிந்­தியத் தீவுகள், இலங்கை தலா ஒரு முறை வென்­றன. தொடக்­கத்தில் 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறையும் பின்னர் 3 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறையும் அதை தொடர்ந்து 4 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறையும் இந்த போட்டி நடை­பெற்று வரு­கி­றது.

கடை­சி­யாக 2013 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தில் நடை­பெற்ற சம்­பியன்ஸ் கிண்­ணத்தை டோனி தலை­மை­யி­லான இந்­திய அணி கைப்­பற்­றி­யது.

8ஆவது சம்­பியன்ஸ் கிண்ணத் தொடர் இங்­கி­லாந்தில் இன்று தொடங்­கு­கி­றது. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. 

இதில் தர­வ­ரி­சையில் முதல் 8 இடங்களில் உள்ள நாடுகள் பங்­கேற்­கின்­றன. 2015 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதக் கணக்கின் படி தர­வ­ரி­சையில் உள்ள ‘டொப் 8’ நாடுகள் தகுதி பெற்­றன. 

மேற்­கிந்­தியத் தீவுகள் 

9ஆவது இடத்தில் இருந்­ததால் வாய்ப்பை இழந்­தது. பங்­க­ளாதேஷ் அணி மேற்­கிந்­தியத் தீவு­களைப் பின்­னுக்கு தள்ளி வாய்ப்பை பெற்­றது. 2006ஆம் ஆண்­டுக்குப் பிறகு பங்­க­ளாதேஷ் சம்­பியன்ஸ் கிண்ணத் தொட­ருக்கு திரும்­பி­யுள்­ளது.

சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளை­யாடும் 8 அணி­களும் இரண்டு பிரி­வு களாகப் பிரிக்­கப்­பட்­டுள்­ளன. 

‘ஏ’ பிரிவில் அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து (போட்­டியை நடத்தும் நாடு), நியூ­ஸி­லாந்து, பங்­க­ளாதேஷ் ஆகிய அணி­களும், ‘பி’பி­ரிவில் இலங்கை, தென்­னா­பி­ரிக்கா, இந்­தியா, பாகிஸ்தான் ஆகிய அணி­களும் இடம்­பெற்­றுள்­ளன.

ஒவ்­வொரு அணியும் தங்கள் பிரிவிலுள்ள மற்ற அணி­க­ளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்­ளிகள் அடிப்­ப­டையில் இரண்டு பிரி­வுகளிலும் முதல் 2 இடங்­களை பிடிக்கும் அணிகள் அரை­யி­று­திக்கு தகுதி பெறும்.

12ஆம் திக­தி­யுடன் ‘லீக்’ ஆட்டம் முடி­வடைகி­றது. 13ஆம் திகதி ஓய்வு நாளாகும். 14ஆம் திகதி முதல் அரை­யி­று­தியும், 15ஆம் திகதி இரண்­டா­வது அரை­யி­று­தியும் நடை­பெறும்.  இறு­திப்­போட்டி 18ஆம் திகதி நடக்­கி­றது.

இன்று நடை­பெறும் தொடக்க ஆட்­டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்­கி­லாந்து - பங்­க­ளாதேஷ் அணிகள் மோது­கின்­றன.

இந்­தப்­போட்­டியில் விளை­யாடும் அணிகளில் இங்­கி­லாந்து, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் ஆகிய 3 அணிகள் தான் கிண்­ணத்தை வெல்­ல­வில்லை. இங்­கி­லாந்து 2 முறை இறுதிப் போட்­டியில் தோற்று இருக்­கி­றது. இதனால் அந்த அணி முதல் முறை­யாக கிண்­ணத்தை வெல்லும் ஆர்­வத்தில் உள்­ளது.

ஏற்­க­னவே வென்ற அணி கிண்­ணத்தை வெல்­லுமா? அல்­லது புதிய அணி பட்டம் பெறுமா என்று ரசி­கர்கள் ஆவ­லுடன் எதிர்­நோக்கி காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

நம்­பிக்­கை­யுடன்

சம்­பியன்ஸ் கிண்ணக் கனவு இன்­னமும் இலங்­கைக்குக் கன­வா­கவே இருக்­கி­றது. ஒருநாள் உலகக்  கிண்­ணத்­திலும் சரி, இரு­ப­துக்கு 20 உலகக் கிண்­ணத்­திலும் சரி இலங்­கையின் ஆதிக்கம் அதிகம். 

1996ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நடந்த ஆறு  உலகக் கிண்ணத் தொடர்­களில் மூன்று முறை இறு­திப்­போட்­டிக்கு தகுதி பெற்­றது. 

அதில் ஒரு முறை சம்­பி­யனும் கூட. ஆறு இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணப் போட்­டி­களில் மூன்று முறை இறு­திப்­போட்­டியில் ஆடி­யி­ருக்­கி­றது. அதில் ஒரு முறை சம்­பி­ய­னா­கி­யி­ருக்­கி­றது. 

1998இல் நடந்த முதல் மினி உலகக் கிண்­ணத்­திற்கு நேர­டி­யாகக் காலி­று­திக்குத் தகுதி பெற்­றி­ருந்­தது இலங்கை அணி. 

2002 ஆம் ஆண்டு சம்­பியன்ஸ் கிண்ணத் தொட­ரில், செப்­டம்பர் 29 அன்று இறு­திப்­போட்­டியில் இந்­தி­யாவைச் சந்­தித்­தது இலங்கை. இறுதிப் போட்­டியின் போது மழை பெய்­ததால் போட்டி அடுத்த நாள் மீண்டும் ஆடப்­பட்­டது. அந்த நாளிலும் மீண்டும் மழை பெய்ததால் போட்டி கைவி­டப்­ப­டு­வ­தாக அறி­வித்­தனர்  நடு­வர்கள். இதனைத் தொடர்ந்து கிண்­ணம் இரண்டு அணி­க­ளுக்கும் பகிர்ந்து கொடுக்­கப்­பட்­டது. இப்­ப­டித்தான் சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் கிண்­ணத்தை வென்­றது இலங்கை. 

2015 ஆம் ஆண்டு உலகக் கிண்­ணத்­திற்குப் பிறகு ஒன்­பது ஒருநாள் தொடர்­களில் விளை­யா­டி­யி­ருக்­கி­றது இலங்கை. இதில் ஐந்தில் தோல்வி. ஒரு தொடர் சமனில் முடிந்­தி­ருக்­கி­றது. ஆடிய 37 போட்­டி­களில் வெறும் 13 போட்­டி­களில்  மட்­டுமே வென்­றி­ருக்­கி­றது. வலு­வான அணி­க­ளுக்கு எதி­ராக பெரிய வெற்­றி­களைப் பெற­வில்லை. குறிப்­பாக இங்­கி­லாந்துஇ தென்­னா­பி­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட அணி­க­ளுக்கு எதி­ராக படு­தோல்­வி­களைச் சந்­தித்­தி­ருக்­கி­றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22