அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் விரைவில் மீள் கட்டியெழுப்பும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைவான சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் கயந்த கருணாதிலக இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அனர்த்தம் தொடர்பில் தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளார். இதனடிப்படையில் வெள்ள அனர்த்தம் மற்றும் மண் சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்காக நிதி அமைச்சும் மற்றும் மத்திய வங்கியுடன் இணைந்து முக்கியமான பல விடயங்களை உடனடியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்றுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2017 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி முதல் மூன்று மாதகால நிவாரண காலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான சுற்றுநிருபங்கள் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தத்தினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மாவட்ட ரீதியிலான தரவுகளை ஜுன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் கிடைக்கப்பெறும் இந்த தகவல்களை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் ஊடாக மொத்த பாதிப்பை மதிப்பீடு செய்து சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கான நட்டஈடு மற்றும் காப்புறுதி தொகையை மிக விரைவில் வழங்குவதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கான சுற்று நிருபமும் மத்திய வங்கியினால் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அனர்த்தத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கம் முழு நாடும் உள்ளடங்கும் வகையில் விசேட காப்புறுதி திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய உயிர் மற்றும் சொத்து இழப்புகளுக்கான நட்டஈட்டினை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM