மழை­யுடன் கூடிய கால­நிலை செப்­டெம்பர் வரை தொடரும் ; சூறா­வளி வராது என்­கி­றது வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம்

Published By: Priyatharshan

30 May, 2017 | 12:35 PM
image

தற்­போது நாட்டில் நில­வு­கின்ற மழை­யுடன் கூடிய கால­நிலை  எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வரையில் நீடிக்கும் சாத்­தியம் உள்­ளது. அதனால் இடி, மின்­ன­லுடன் கூடிய மழை தொடரும் என­ வ­ளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­தது.

அதே­நேரம் வங்­களா விரி­கு­டாவில் மையம் கொண்­டி­ருந்த உயர் அழுத்த காற்று இலங்­கைக்கு அப்பால் பய­ணிப்­பதால் சூறா­வளி காற்று ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தியம் இல்­லாது போயுள்­ள­தென  வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின்  எதிர்­வு­கூறல் அதி­காரி அதுல கரு­ணா­ரத்ன தெரி­வித்தார்.

அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போதும் நாட்டின் மேற்குஇ சப்­ர­க­முவ,தெற்கு, வட­மத்­திய மாகா­ணங்­களில் இடி­யுடன் கூடிய மழை தொட­ர்ந்தும் நீடிக்கும் சாத்­தியம் உள்­ளதை வானிலை அவ­தான நிலை­யத்தின் அறிக்­கைகள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. 

மேல்­மா­கா­ணத்­திற்கு அதிக மழை­வீழ்ச்சி பதி­வா­வ­தற்­கான சாத்­தி­யப்­பாடு­களும் தென்­ப­டு­கின்­றன. எவ்­வா­றா­யினும் வங்­காள விரி­கு­டாவில் மையம் கொண்­டி­ருந்த உயர்  அமுக்க காற்று தற்­போது இலங்­கைக்கு அப்பால் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளதால் சூறா­வளி தாக்கம் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்­புக்கள் இல்­லாது போயுள்­ளன.

இருப்­பினும் நாட்டின் மலை­யகம் மற்றும் வடக்கு பிர­தே­சங்­களில் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்­றர்கள் வேகத்தில் காற்­று­வீசும் கரை­யோர பிர­தே­சங்­களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 ஆக காணப்­படும். மலை­யக பகு­தி­களில் காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் போது மரங்கள் முறிந்து விழுந்து அதி­க­ள­வி­லான அனர்த்­தங்கள் ஏற்­ப­டக்­ கூடும். 

அதேபோல் இடி மின்­ன­லுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என்று அறியப்பட்டுள்ளது. மின்னலின் தாக்கம் அதிகரிப்பை காண்பிக்கக்கூடும். இந்த காலநிலை மே மாதத்தில் தொடங்கி செப்டெம்பர் வரையில் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46