வவுனியாவில் நேற்று இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையி் போது 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் தாண்டிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது 15 பேரடங்கிய குழு தாக்குதல் மேற்கொண்டிருந்ததில் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் பொலிஸாரின் விசாரணைகள் பக்கசார்பாக இடம்பெற்று வருவதாக எண்ணிய பாதிக்கப்பட்டவர்கள் நேற்று இரவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வவுனியா பொலிஸாரின் செயற்பாட்டில் நம்பிக்கையில்லை. அவர்கள் தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை என தெரிவித்து பிறிதொரு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த இளைஞரைத் தாக்கியதாகத் கூறப்படும் 4 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன், மேலும் ஒருவரை தேடிச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளார்.
அவர்கள் பயன்படுத்தும் குழாய்க்கிணறு தோண்டும் கனரக இயந்திரத்திலிருந்து புதிய வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM