களுத்துறை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தம் காரணமாக 54 பேர் உயிரிழந்துள்ளதுடன் 69 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக மேலும் 57 பேர் காணாமல் போயுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் யூ.டி.சி. ஜயலால் தெரிவித்தார்.
களு கங்கையின் நீர் மட்டம் ஓரளவு குறைந்துள்ள போதும் தாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள நிலைமை நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை களுத்துறை மாவட்டத்தில் 29199 குடும்பங்களைச் சேர்ந்த 107906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 1602 குடும்பங்களைச் சேர்ந்த 6034 பேர் 60 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 91 வீடுகள் முற்றாகவும் 805 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களில் பெரும்பாலானவை மண் சரிவினாலேயே ஏற்பட்டுள்ளன. குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் 26 பாரிய மண் சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
களுத்துறைஇ மதுராவல, தொடங்கொட பிரதேச செயலகப் பிரிவுகளின் கீழ் உள்ள பகுதிகள் பல நேற்றும் அபாய எச்சரிக்கையின் கீழேயே இருந்தன. மேல் மாகாணத்துக்கு தொடர்ந்து மழை பெய்யக் கூடிய அபாயம் காணப்படும் நிலையில் களுத்துறை மாவட்டத்துக்கான எச்சரிக்கை தொடர்கிறது.
குறிப்பாக புளத்சிங்கள உட்பட பல பகுதிகளில் பதிவான மண்சரிவில் காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்கின்றன. இந் நிலையில் மீட்புப் பணிகளை இராணுவத்தினர் தொடரும் நிலையில் கடற்படையினரும் விமானப்படையினரும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தார். இராணுவத்தினர் 15 பீ.டி.ஆர். அனர்த்த மீட்பு வாகனம் மற்றும் 30 இராணுவ படகுகளில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தின் 1600க்கும் மேலான படைவீரர்கள் ஈடுபட்டதுடன் மேலும் மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சுமித் அத்தபத்து ஆகியோரின் கண்காணிப்பில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைய இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தினால் இந்த பிரதேசத்திற்கு மருத்துவ சேவையின் நிமித்தம் 5 குழுக்கள் அனுப்பப்பட்டு இப்பிரதேசத்தில் பாதிப் புக்குள்ளான பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM