நாட்டின் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பார்வையிடும் நோக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அநாவசியமான பயணங்களை மேற்கொண்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 50 ஆயிரம் பொலிஸார் சேவையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். சகலரதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையிலும் தற்போது வரையில் எந்தவொரு திருட்டுச் சம்பவமும் பதிவாகவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
பொலிஸ் உயிர்பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட செயற்பாடுகளின் பலனாக தற்போது வரையில் 123 உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளதும் விசேடமானதாகும். இவ்வாறான பாதுகாப்புச் செயற்பாடுகள் முறையாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமே இருக்கும்.
இவ்வாறான நிலையில் அநாவசியமான முறையில் மேற்படி வெள்ள நிலைமைகளை பார்வையிடும் நோக்கில் படகுகளில் வருகின்றவர்களினால் நாம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
தற்போதுவரையில் அவ்வாறு பார்வை யிட வருகை தந்தவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மேற்படி அனர்த்தங்களை பார்வையிடும் நோக்கில் அநாவசியமாக பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்து கின்றோம்.
அத்துடன் தற்போதைய அனர்த்த காலத்தில் பொலிஸ் நிலையங்களின் தகவல் மையங்கள் அனைத்தும் தொடர்ந்தும் சிறப்பான சேவைகளை வழங்கிக்கொண் டுள்ளன. அதனால் திருட்டுச் செயல்களும் குறைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM