நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
மண்சரிவு, வெள்ளம் காரணமாக இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் நேற்று ஐந்தாவது நாளாகவும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியிருந்தன.
இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 77 பேர் மண்சரிவு மற்றும் வெள்ளத்துக்கு பலியாகியுள்ளதாகவும் மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் 28 பேர் காணாமல்போயுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபோதகம தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கலவான மற்றும் நிவித்திகல, அயகம பகுதிகளில் இருந்து தற்சமயமே தகவல்கள் கிடைக்கப் பெற்று வரும் நிலையில் இத்தகைய சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மழையானது இரத்தினபுரி மாவட்டத்தில் தற்சமயம் ஓய்ந்துள்ள போதும் இரத்தினபுரியின் 325 கிராம சேவகர் பிரிவுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரியின் எலபாத்த, பெல்மதுளை, குருவிட்ட, எஹலியகொட, கிரியெல்ல, இம்புளுவ, அயகம, காவத்தை, கலவான ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து தாழ்நிலப் பகுதிகளும் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காட்சியளிக்கின்றன. இந் நிலையில் இந்த பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகள் முற்று முழுதாக விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக கலவான வைத்தியசாலை பகுதியும் அதனை அண்மித்த கிராமங்களையும் அயகம பகுதியையும் கடற்படையினர் படகுகள் ஊடாக நெருங்குவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் விமானப்படையினர் இப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக விமானப்படையின் எம்.ஐ. 17 ஹெலிகொப்டர்கள் 4, பெல் 212 ஹெலிகொப்டர் ஒன்று, பெல் 412 ஹெலிகொப்டர் ஒன்று ஆகியன இப்பகுதியில் அனர்த்த மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் இயற்கையின் சீற்றத்தால் 29345 குடும்பங்களைச் சேர்ந்த 112928 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி, அவர்களில் 8997 குடும்பங்களைச் சேர்ந்த 38323 பேர் 169 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைவிட இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம், மண்சரிவு காரணமாக 79 வீடுகள் முற்றாகவும் 1140 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை தொடர்பில் தற்போதைக்கு தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெள்ளம் தொடரும் நிலையில் அந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே இரத்தினபுரி மாவட்டத் தின் 10 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட வீதிகள் வெள்ளம் காரணமாக போக்குவரத்து
செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் குறித்த வீதிகள் ஊடாக பயணிக்க வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
குறிப்பாக இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி –- கலவானஇ இரத்தினபுரி –- பாணந்துறைஇ இரத்தினபுரி பலாவெல ஆகிய வீதிகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. அதனால் அந்த வீதிகளினூடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
குருவிட்ட பொலிஸ் பிரிவின் குருவிட்ட - கொரக எல்ல இரு வீதிகளும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.கலவான பொலிஸ் பிரிவில் கலவான -– பொத்துபிட்டி, கலவான -– மத்துகம ஆகிய வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
எஹலியகொட பொலிஸ் பிரிவில் எஹலியகொட -– எல்லாவல வீதி நீரில் மூழ்கியுள்ளது. இறக்வானையில் பொத்துபிட்டி வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதனைவிட அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அயகம –- கவகிரி வீதியும் வேவல்வத்த பொலிஸ் பிரிவின் வேவல்வத்த - இரத்தினபுரி வீதியும் கொலன்ன பொலிஸ் பிரிவின் கொலன்ன - – தெனியாய வீதியும் நிவித்திகல பொலிஸ் பிரிவின் நிவித்திகல - கலவான வீதியும் கிரிஎல்ல பொலிஸ் பிரிவில் கிரிஎல்ல– - பாணந்துறை வீதியும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM