தமது மனைவியின் அக்காவின் மகளான நாலரை வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 38 வயதுடைய பெரியப்பாவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.
ஆரையம்பதி அமரசிங்க வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது மனைவியின் சகோதரி வைத்தியசாலையில் தாதியாக பணிபுரிபவர். அவரது நான்கரை வயது மகளை தங்கையிடம் ஒப்படைத்துவிட்டே தினமும் கடமைக்கும் செல்வதுண்டு. இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியை தொடர்ந்தும் இச் சந்தேக நபர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமி தனக்கு சிறுநீர் கழிக்க முடியவில்லையென அழுதபோதே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் துஷ்பிரயோகத்திற்குள்ளானது வெ ளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்தது. காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தலைமையி லான பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM