பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் என்று பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க. வின் 3 ஆண்டுகால நிறைவை முன்னிட்டு நடைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இறுதி வரை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட விடாமல் அவர் மரணம் அடைவதற்கு தமிழகத்தை சேர்ந்த வைகோ, சீமான் மற்றும் திருமாவளவன்தான் காரணம்.
இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேச்சை கேட்பதில்லை, இவர்கள் பேச, பேச இலங்கை தமிழர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். நன்றாக இருந்த விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை துப்பாக்கியை கீழே போடவிடாமல் வைகோ, சீமான், திருமாவளவன் ஆகியோர் பேசி, பேசி உணர்ச்சிவசபட வைத்து மரணமடைய வைத்தனர். இறுதி வரை அவரை சமாதானம் பேசவிடாமல் தடுத்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தான், இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் நம்ம அரசியல்வாதிகள் யாரும் இலங்கை சென்றது கிடையாது. இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டது பிரதமர் மோடி தான். மேலும் தலைமை செயலாளர், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததாக பலர் கொதிக்கின்றனர். முதல்வர் தவறு செய்தாலும் அவர் வீட்டிலும் சோதனை நடக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM