இந்துக்களிடையே பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையும், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனமும் இன்று நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜையில் பங்கேற்பதற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மலைப் பகுதிகளில் அவர்கள் கூடாரம் அடித்து தங்கி உள்ளனர். மகரவிளக்கு பூஜை இன்று நடைபெறவுள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் வெள்ளமாக காட்சியளிக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி மாலை நடை திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர். பின்னர் டிசம்பர் 27ஆம் திகதி மண்டல பூஜை நடந்தது. அன்று இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் திகதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டது.
மகரவிளக்கு பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து புதன்கிழமை பகல் 1 மணிக்கு சபரிமலை நோக்கி சரண கோஷம் முழங்க ராஜபிரதிநிதி தலைமையில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக புறப்பட்டது.
அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தலைநகரான திருவனந்தபுரம் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பு நெய் மூலம் நெய் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 1.27 மணிக்கு மகர சங்ரம பூஜை நடத்தப்பட்டு அதிகாலை 2 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து வழக்கம்போல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM