உள்ளக விசாரணை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து உரிய சமிக்ஞை கிடைத்தவுடன் இதற்கான பணிகளை ஆரம்பிப்போம் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கலப்பு விசாரணைக்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. அதற்கு மாறாக தேவைப்படும் பட்சத்தில் சர்வதேச நிபுணர்களை அழைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிடுகையயில், ஐக்கிய நாடுகளினால் முன்வைக்கப்பட்ட கலப்பு விசாரணை பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக உள்ளக விசாரணை பொறிமுறையையே தேர்ந்தெடுத்தது.
இதன்படி அரசாங்கத்திற்கு தேவையேற்படும் பட்சத்தில் சர்வதேச நிபுணர்களை நாம் பெற்றுக்கொள்வோம். உள்ளக விசாரணை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து உரிய சமிக்ஞை கிடைத்தவுடன் இதற்கான பணிகளை ஆரம்பிப்போம்.
எனவே, உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் அரசாங்கம் தெளிவாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. ஆகவே, இதற்கான நேரம் வரும் போது விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM