தெஹியோவிட்ட பகுதியில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக தெஹியோவிட்ட நகரம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 8 அடி உயரம் வரை நீர் நிரம்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை தெஹியோவிட்ட தேசிய பாடசாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளதுடன், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளது.
இதனால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் பஸ்கள் மாற்றுவழிகளை பயன்படுத்திவருவதுடன், சில பஸ்கள் மீண்டும் ஹட்டன் நோக்கி புறப்பட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சிறிய வாகனங்கள் தெஹியோவிட்ட பகுதியிலுள்ள மாற்றுவழியொன்றினூடாக பயணிப்பதாக செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை தெய்யோவிட்ட நகரத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM