வெளிநாட்டு யுவதியை பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் எல்ல உல்லாச விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பண்டாரவளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது,நீதிவான் அந்நபரை கடுமையாக எச்சரித்ததுடன் 1,500 ரூபா அபராதம் விதித்தார்.
எல்ல உல்லாச விடுதியில், உல்லாச பிரயாணிகளாக தங்கியிருந்த பெய்ருஸ் நாட்டின் இரு யுவதிகளில் ஒரு யுவதி மீதே பாலியல் ரீதியில் குறித்த நபர் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட யுவதி, எல்ல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விடுதி ஊழியரான 32 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபரைக் கைது செய்தனர்.
பின்னர் அவரை பண்டாரவளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே நீதிவான் மேற்குறிப்பிட்ட தண்டனைகளை விதித்ததோடு, பாதிக்கப்பட்ட யுவதிக்கு இழப்பீடாக பத்தாயிரம் ரூபாவை வழங்கும்படியும் உத்தரவிட்டார்.
இழப்பீடும் அபராதமும் செலுத்தப்படாவிட்டால், தலா இரண்டு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM