யுரோப்பா கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று மென்சென்ஸ்டர் யுனைட்டட் அணி இவருடத்திற்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இறுதிப்போட்டியில் எஜக்ஸ் அணியை எதிர்கொண்ட மென்சென்ஸ்டர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
போட்டி ஆரம்பித்த 18 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் அணியின் பௌல் பொக்பா முதலாவது கோலினை அணிக்கு பெற்றுக்கொடுக்க, 48 ஆவது நிமிடத்தில் ஹென்ரிக் மெக்கிட்டரியான் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
எஜக்ஸ் அணி கடும் முயற்சிகளை மேற்கொண்டும், எவ்வித கோல்களையும் பெறமுடியாமல் தோல்வியடைந்தது.
இந்த வெற்றி தொடர்பில் கருத்து தெரிவித்த மென்செஸ்டர் அணியின் பௌல் பொக்பா, “ மென்செஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த எமது உறவுகளுக்காகவே நாம் விளையாடினோம். அவர்களுக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறோம். இந்த சீசன் எங்களுக்கு மகவும் மோசமானதாக அமையும் என சிலர் தெரிவித்தனர். எனினும் நாம் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றிருக்கிறோம். இதற்கு நாம் பெருமையடைகிறோம். நாம் இந்த வெற்றிக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தோம். அதற்காக நாம் இப்பொழுது சந்தோஷப்படுகிறோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM