தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 ஆவது சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 7 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் எம்.கணேசராசா நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வரும் நிலையில் இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் இன்னும் 3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படாமல் உள்ளதாகவும் அவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும் மன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இக் கொலையில் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் வெலிக்கந்தையைச் சேர்ந்தவரும் இராணுவத்தில் முன்னர் கடமையாற்றியவருமாகிய 30 வயதுடைய மதுசங்க அல்லது வினோத் என அழைக்கப்படுபவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.கணேசராசா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை ஜூன் மாதம் 7 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை இக்கொலை தொடர்பில் முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM